Designed by Enthan Thamizh



சித்திரை1
ஆடி1
ஐப்பசி1
தை1 
--------------------------------------------
எல்லாம் விழா வாக கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்...

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியல வச்சிருக்காங்க....!

Ok. Lets look at the science behind it...

"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு" னு school பசங்களுக்கு சொல்லிதறோம்....

என்னைக்காச்சும் ஒரு #compass வச்சு சூரியன் உதிக்குறப்போ check பன்னி இருக்கோமா?
கண்டிப்பாக இல்ல... 
--------------------------------------------
நம்ம education system அ design பன்னின வெள்ளகாரன், நம்ம கிட்ட இருந்த அறிவியல் அ அழிச்சிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்திட்டு போயிறுக்கான்றதுக்கு இதுவும் ஒரு சான்று....
--------------------------------------------
ஆமாங்க சூரியன் ஒரு குறிப்பிட்ட நாள்ல மட்டும் தான் exact ah கிழக்கே உதிக்கும்.... 

அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு extreme point la, மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்... 

அப்பறம் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...

இப்படி correct ஆ கிழக்கு ல ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் correct ஆ கிழக்குக்கு வர ஆகிற time., Correct ah "1 year"...!!!!
--------------------------------------------
சரி... இதுக்கும் தமிழ் மாததுக்கும் என்ன சம்பந்தம் னு தானே யோசிக்குறீங்க.... 
--------------------------------------------
சூரியன் correct ah கிழக்கு ல start ஆகுற நாள் தான் #சித்திரை1.., புத்தாண்டு...!!! (In science it is called Equinox)

அப்புறம் extreme வடகிழக்கு point தான் #ஆடி1 .... (solstice)

மறுபடியும் கிழக்குக்கு வரது #ஐப்பசி1 (equinox) 

Going to extreme தென்கிழக்கு is #தை1 (solistice)
--------------------------------------------
இந்த வானியல் மாற்றங்கள், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களை நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனணவரும் அறியும் வகையில் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...
--------------------------------------------
சித்திரை (equinox) - புத்தாண்டு
ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு
ஐப்பசி (equinox)- தீபாவளி
தை (winter solstice) - பொங்கல்
--------------------------------------------
நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதன் அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...
--------------------------------------------
நமது முன்னோர்கள்.....
"தன்னிகரற்ற"
மாபெரும் அறிவாளிகள்
மிகவும் மகத்தானவர்கள்
--------------------------------------------
குழந்தைகளுக்கு தேர்வுகள் முடிந்துவிட்டது. பலரும் வெளியூருக்கு செல்ல திட்டம் போட்டிருப்போம். அப்படி செல்லும் போது, நம் வீட்டில் எத்தனை நாள்/எவ்வளவு நேரம் மின்சாரம் போனது என்று தெரியாது. குறிப்பாக நீங்கள் 1-2 நாட்கள் ஊருக்கு செல்ல திட்டம் தீட்டியிருந்தால், கண்டிப்பாக நம் வீட்டு ஃப்ரிட்ஜில் ஒருசில சமைத்த உணவுகளை வைத்துவிட்டு செல்வோம்.

ஆனால் இனிமேல் தான் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுமே. நீங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து சென்ற உணவுப் பொருள் நன்றாக இருக்குமா இல்லை என்று ஒவ்வொரு முறையும் அதை சூடேற்றி பார்த்து தெரிந்து கொள்ள முடியாது.

எனவே ஓர் அற்புதமான வழி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உணவு பதப்படுத்தல்
சமைத்த உணவு கெட்டுப் போகாமல் இருக்கத் தான் நாம் ஃப்ரிட்ஜில் வைக்கிறோம். ஆனால் மின்சாரம் நீண்ட நேரம் இல்லாமல் இருந்தால், உறைந்து பாழாகும். பின் மீண்டும் மின்சாரம் வந்ததும், உணவு உறைய ஆரம்பிக்கும். எனவே வெளியூர் அல்லது வேறு எங்கேனும் செல்வதாக இருந்தால், உணவை ஃப்ரிட்ஜில் வைத்து செல்லும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.

மின்சாரம் நீண்ட நேரம் இல்லாமல் இருந்தால், அது உணவில் சால்மோனெல்லா மற்றும் இதர மோசமான பாக்டீரியாக்களைப் பரவச் செய்யும். இதனால் தீவிர ஆரோக்கிய பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும்.

மின்சாரம் நீண்ட நேரம் இல்லை என்பதை எப்படி அறிவது?

நாம் வெளியூர் சென்ற நேரத்தில் நம் வீட்டில் நீண்ட நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது என்பதை ஓர் எளிய வழியின் மூலம் அறியலாம். அதுவும் ஒரு நாணயத்தைக் கொண்டு அறிய முடியும்.

மின்சாரம் இல்லாத நேரத்தில், ஃப்ரிட்ஜ் திறக்காமலேயே இருந்தால், ஃப்ரிட்ஜில் வைத்த உணவு குறைந்தது 4 மணிநேரம் வரை பாழாகாமல் இருக்கும். இதற்கு ஃப்ரிட்ஜில் இருக்கும் குளிர்ச்சியான வெப்பநிலை தான் காரணம்.

ஃப்ரீசரில் வைத்த உணவு
ஃப்ரீசரில் உணவை வைத்து, ஃப்ரீசர் முழுமையான குளிர்ச்சியில் இருந்தால், 48 மணிநேரம் வரை உணவு பாழாகாமல் இருக்கும். அதுவே ஃப்ரீசர் பாதி குளிர்ச்சியில் இருந்தால், 24 மணிநேரம் வரை ஃப்ரீசரில் வைத்த உணவு கெட்டுப் போகாமல் இருக்கும்.

சோதிக்கும் முறை:
ஒரு கண்ணாடி கப்பில் நீரை நிரப்பி, அதை ஃப்ரீசரில் வைத்து நன்கு உறைய வைக்க வேண்டும். பின் வெளியூர் செல்லும் போது, அந்த கப்பின் மேல் ஒரு நாணயத்தை வைத்து மீண்டும் ஃப்ரிட்ஜில் வையுங்கள். வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பும் போது, நாணயம் எங்குள்ளது என்று பாருங்கள்.

முடிவு

நாணயம் அந்த கப்பின் மேற்பகுதியில் அல்லது நடுவில் இருந்தால், சிறிது நேரம் தான் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

ஒருவேளை அந்த நாணயம் கப்பின் அடிப்பகுதியில் இருந்தால், நீண்ட நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் ஃப்ரிட்ஜில் உள்ள உணவை சாப்பிடவே கூடாது.


போகி: பழையன எரித்து, புதியன புகுத்தினோம். சிலர் வண்டி டயர்களை எரித்தார்கள். டயர் இருக்காதே என்று கூறியிருந்தால் புரிகிறது. எதையுமே எரிக்காதே என்றார்கள். சரி, இதை எரிக்கவில்லை. உலகம் குளிர்ந்துவிட்டதா? வாகன புகையையும், தொழிற்சாலை புகையையும் என்ன செய்வதாக உத்தேசம்?

பொங்கல்: இதில் இருந்த ஜல்லிக்கட்டை தடை செய்தார்கள். மிகுந்த போராட்டத்துக்கு பிறகு இது தற்காலிகமாக தீர்ந்துள்ளது. இன்னமும் முடியவில்லை.

புத்தாண்டு: விஞ்ஞான பூர்வமாக நிரூபித்து இதுதான் சரி என்று சித்திரை மாதத்தை வைத்தால், ஏதோ அறிவுகெட்ட காரணங்களை முன்னிறுத்தி தமிழர் புத்தாண்டு என்று தை முதல் தேதியை நுழைத்தார்கள். உபயம்: கருணாநிதி.

விநாயக சதுர்த்தி: வண்ணங்கள் பூசிய விநாயகரை நீர்நிலைகளில் கரைக்காதே என்று வழக்கு போட்டார்கள். நூறு கண்டிஷன்களோடு இப்போது களிமண்ணில் செய்த மூலிகை வண்ணங்களால் ஆன விநாயகரை வைத்துள்ளோம். என்ன செய்வதென்று சிந்திக்கிறார்கள்.

தீபாவளி: புகைக்கு பட்டாசுதான் காரணம் என்று முடிவே செய்துவிட்டது நீதிமன்றம். வைக்கோல் எரிக்கிறார்கள் என்று தலைப்பாடாக அடித்துக்கொண்டாலும் தீபாவளியை நிறுத்தி வைத்தது. பத்மாவதி என்ற ஒரு படம் பற்றிய உண்மை தெரிய வரலாற்று ஆய்வாளர்களிடம் பொறுப்பை ஒப்படைத்த நீதிமன்றம், புகைக்கு காரணத்தை தானே கண்டுபிடித்து பட்டாசுதான் என்று கூறி தடை செய்து பார்த்துள்ளது. இதை விஞ்ஞானிகளிடம் ஒப்படைக்கவேண்டியதுதானே?

சபரிமலை: பெண்கள் வரலாம், வரக்கூடாது. அதெல்லாம் ஹிந்துக்கள் பிரச்சனை. முஸ்லீம் அமைப்பு யார் இதற்கு வழக்கு தொடுக்க? தொடுக்கிறான். நீதிமன்றமும் அனுமதிக்கிறது. ஹஜ் யாத்திரைக்கு ஆண் துணையின்றி பெண் போகக்கூடாதாம். அதற்கு வழக்கு தொடுக்க துப்பில்லை. இதற்கு வந்துவிட்டார்கள். இத்தனை ஆண்டுகளாக இஸ்லாமுக்கு விரோதமான முறையில் தலாக்கும், ஹஜ் யாத்திரைக்கு சலுகையும் பெற்று செல்கிறார்கள். அது தவறில்லையாம். ஹிந்து மத விவகாரத்தில் தலையிடுகிறார்கள் முஸ்லிம்கள். அடுத்து அந்த நடிகை ஜெயமாலா. இந்த ஜென்மத்தில் எவனும் தடுக்கி விழுந்து சாமி சிலையை தொட முடியாது. அத்தனை தூரத்தில் இருக்கிறது. இந்த உலகிலேயே தடுக்கி கீழே விழாமல், மூன்று படிக்கட்டுகள் மேலே விழுந்து, அதன் பின் பனிரெண்டு அடி தாண்டி விழுந்த ஒரே பெண்மணி ஜெயமாலாதான். அதெப்படி, சபரிமலை சீசன் துவங்கும்போது பெரியாறு அணை பிரச்சனை துவங்குகிறது? கிருஸ்தவர்கள் வேலை?

திருவண்ணாமலை: மலையை சுற்றி உள்ள மரங்களை வெட்டவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி செய்ய துவங்கி பின், தனிப்பட்ட முறையில் சில வழக்கு தொடுத்து நிறுத்தினர். அதென்ன வெறும் மொட்டை மலையா? இந்த நாட்டில் கோவிலை சுற்றியும், நதிகளை சுற்றியும்தான் ஊர்கள் பிறந்தன, வளர்ந்தன. அப்படி இருக்கும் கோவிலை சுற்றியுள்ள பல விஷயங்கள் கோவில் சம்பந்தப்பட்டவையே. என்ன இதே என்று தெரியாமல், பொசுக்கென்று சாலை அகலப்படுத்துகிறேன் என்று கோடாலியை கையில் எடுத்துவிட்டார்கள்.

ஈஷா யோகா: நிலத்தை அபகரித்தார், ஒப்புதல் பெறவில்லை, காட்டை அழித்தார் என்று ஆயிரம் நொட்டைகள். சரி, நடவடிக்கை எடுங்கள் என்றால் எல்லோரும் பேசாமல் இருக்கிறார்கள். ஆனால், ஊடகங்களுக்கு செய்தி மட்டும் போய் தள்ளுகிறது. அவர்கள்தான் நீதிமன்றம்போல எல்லோரும் அங்கு சென்று முறையிடுகிறார்கள்.

திருப்பதி: இரட்டை மலை ஏழுமலையானுக்கே என்று சொன்ன ராஜசேகர ரெட்டியை இறைவனே சம்ஹாரம் செய்துவிட்டான்.

அமர்நாத்: முஸ்லிம்கள் குறுக்கல்களாக இருக்கும் அமர்நாத் பனிலிங்கத்தை டில்லிக்காரன் செயற்கையாக உருவாக்குகிறான் என்று கதை விட்டு கொஞ்ச நாளைக்கு அழகு பார்த்தார்கள்.

காஞ்சி: ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் விடுதலையானார், சரி., சங்கரராமன் எப்படித்தான் இறந்தார்? நீதிபதி என்னவோ, அபத்தமான வழக்கு. எதை வைத்துக்கொண்டு இவர்தான் கொன்றார் என்று சொல்கிறீர்கள்? இந்த 39 மொட்டை கடுதாசியை வைத்தா என்று கேட்டுவிட்டார்.

கன்னியாகுமரி: அங்கு மாபெரும் இயேசு சிலை வைப்பதாக இருந்தார்கள். என்னவோ கருணாநிதி கட்டிக்கொண்ட புண்ணியம், திருவள்ளுவர் வந்தார்.

இன்னும் என்னென்ன திட்டங்கள் வகுக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எதை சொன்னாலும், வெளியே வராமல், சங்கத்தில் சேராமல், அப்படியே வீட்டில் தூங்குகிறான் பாருங்கள்.......

பாரதி சொல்வது போல, என்ன கூறி இவர்கெங்குணர்த்துவேன் என்னுள்ளம் எரிவதை.



ஜென் குரு ஒருவர் தியானத்ததில் இருந்தார். தூரத்தில் இருந்து ஒருவன்  ஓடிவந்து, குருவை பின்னால் தட்டிவிட்டுச் சென்றான். குருவோ சலனமில்லாமல் இருந்தார். அவன் மீண்டும் மீண்டும் அதையே செய்தான்.

பின்னர் ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டான். குருவோ புன்னகை மாறாமல் தியானத்தில் இருந்தார்.

அருகில் இருந்த சீடனுக்கு ஆச்சரியம். குரு கண் விழித்ததும் கேட்டான். சிரித்தபடி சொன்னார் குரு. "அவனுக்கு ஏதோ பிரச்சனை. அதை என்னிடம் மாற்றிவிடப் பார்க்கிறான். அவன் அடித்ததற்கு நான் கோபப்பட்டு எதிர்வினையாற்றினால்  அவன் பிரச்சனை எனதாகிப் போய்விடும்.அதனால் என் மன நிலை மாறிவிடும். அதை எனக்கு மாற்றிவிட்ட மகிழ்ச்சி அவனுக்குக் கிடைக்கும். அதற்கு நான் ஏன் இடம் தர வேண்டும்? இப்போது பார் அவனே அசந்து போய் உட்கார்ந்து விட்டான்" என்றார் அமைதியாக.

நிர்வாக நீதி

தாக்கும் பிரச்சனைகளை ஏற்றுக் கொள். தடுக்காதே. உந்தும் உணர்ச்சி வேகத்தில் உன்னை இழக்காமல் செயல்பட்டால் பிரச்சனைகள் வலுவிழந்துவிடும். நிரந்தர வெற்றி என்பது நிதானமாக அதை உணரும் பக்குவத்தின் தீர்வில்தான் இருக்கிறது.



கல் அடி பட்டாலும் கண் அடி படக் கூடாது என்று முன்னோர்கள் மிக அழகாக, திருஷ்டியைப் பற்றி விளக்கமாகக் கூறியுள்ளனர். வீட்டில் குப்பை சேர, சேர, துர்நாற்றம் வீசும் அது போலத்தான் கண் திருஷ்டியும், கூட கூட, பல்வேறு பிரச்சனைகள் குடும்பத்தில் உள்ளவர்களை ஆட்டிப்படைக்கும்.
இதுபோன் திருஷ்டிகளை போக்குவதற்கு பல்வேறு வழிமுறைகளை நம் முன்னோர்கள் கூறினாலும், வீட்டில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகள், இவ்வகை கண் திருஷ்டிகளை ஏற்றுக் கொண்டு, வளர்ப்பவர்களுக்கு பாதுகாப்பளிப்பதாக உள்ளது. இதனால்தான் அந்தக் காலத்தில் வீட்டில் அதிகமாக வளர்ப்பு பிராணிகளை வளர்க்க ஆரம்பித்தனர்.

பூனை முதற் கொண்டு யானை வரை வளர்ப்பு பிராணிகளாக முன்னோர்கள் வளர்த்ததன் காரணமும் இதுதான். கண் திருஷ்டி மட்டுமின்றி, செய்வினை, சூன்யம், துர் ஆவிகள், பேய், பிசாசு போன்ற தீய சக்திகளை கண்டறியும் ஆற்றல் வளர்ப்பு பிராணிகளுக்கு உண்டு. மேலும் மேற்கண்ட துர் சக்திகளால் விளையும் தீய சக்திகளை தடுத்து நிறுத்தும் சக்தியும் வளர்ப்பு பிராணிகளிடம் உண்டு.

ஒரு சில வீடுகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணிகள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் ஆனால் திடீரென இறந்து விடும், இதற்கு காரணம், மிகவும் கொடுரமான வலிமைவாய்ந்த கெடுதலை, வளர்ப்பவருக்கு ஏற்படாமல் இருக்க, வளர்ப்பு பிராணிகள் ஏற்றுக் கொண்டு, அவை மரணத்தை தழுவும். அதாவது தன் உயிரை கொடுத்து வளர்ப்பவரை காப்பாற்றும்.

இவ்வளவு சக்தி வாய்ந்தது நாம் வளர்க்கும் பிராணிகள், இந்த வகையில் இதை பயன்படுத்தி காசு சம்பாதிக்க, தற்போது பல்வேறு பிராணிகளை வாஸ்த்து என்று பெயரிட்டு மக்களை ஏமாற்றும் வேலைகளும் நடைபெறுகிறது. அதில் குறிப்பாக வாஸ்த்து மீன் வளர்ப்பு, வாஸ்த்து என்று கூறி ஆயிரக் கணக்கில் ஒரு மீனை விற்கின்றனர். இது முற்றிலும் தவறு.

தனிப்பட்ட ஒரு விலங்கை, மீனை எந்த சாஸ்த்திரமும் குறிப்பிட்டு சொல்லவில்லை. ஓர் அறிவு, இரண்டறிவு முதற்கொண்டு ஐந்தறிவு உள்ள மிருகங்கள் வரை அனைத்தையும் மனிதன் வளர்க்கலாம் என்று கூறப்படுகிறது.

வளர்ப்பு விலங்குகளால் மனிதனுக்கு ஏற்படும் நல்ல மற்றும் தீய பலன்களை என்னவென்று நாம் அறிந்து கொள்ள நமது முன்னோர்கள் அஷ்வ லட்சணம், கஜ லட்சணம் போன்ற தனி சாஸ்திரங்களை உருவாக்கினார்கள். அவற்றில் மிக முக்கியமான பகுதி மனிதன் ஏன் வீட்டு விலங்குகளை வளர்க்க வேண்டும் என்பதற்கு தரும் விளக்கங்கள் மிகவும் வியப்புக்குரியதாக இருக்கிறது.

அந்த சாஸ்திரங்களில் நமது முன்னோர்கள் மிக முக்கியமான கருத்தொன்றை சொல்கிறார்கள், அதாவது ஒரு வீட்டுக்கு வரும் எதிர்பாராத துயரத்தை தடுப்பதற்காக அந்த தீய சக்தியை தனக்குள் வாங்கி கொண்டு வளர்ப்பு விலங்குகள் மறித்து விடும் என்று சாஸ்திர நூல்கள் சொல்கின்றன. மேலும் மனிதனுக்கு ஏற்படும் கண்திருஷ்டி போன்ற தோஷங்களை விலங்குகள் தனக்குள் ஈர்த்துக்கொண்டு வளர்ப்பவனுக்கு தான் துன்பபட்டாலும், அரணாக நிற்குமென்றும் சொல்லபடுகிறது.

அந்த வகையில் பார்த்தால் நமது வீடுகளில் வளர்க்கப்படும் விலங்குகள் மற்றும் பறவைகள் அனைத்துமே நமக்கு வருகின்ற துயரத்தை தான் வாங்கி கொண்டு வாழ்கின்றன அல்லது மறித்து போகின்றன. இந்த நியதிக்கு ஆனை முதல் பூனை வரை பொருந்தி வரும். அத்தோடு நாம் வீட்டில் வளர்க்கும் மீன்களும் கூட நமது கஷ்ட நஷ்டங்களை தனக்குள் ஈர்த்துகொள்ளும் என்று சொல்லபடுகிறது. அதனடிப்படையில் எந்த வகை மீனை வளர்த்தாலும் அதன் பயன் ஒன்று தான் என்பது தெளிவாக தெரிகிறது.

தற்போதைய கால கட்டத்தில் நகரமயமாகிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் கிராமங்களைத் தவிர்த்து நகரத்தில் ஆடு, மாடு, குதிரை, யானை போன்றவற்றை வளர்ப்பது சாத்தியமில்லை. ஆனால் மீன் வளர்ப்பது என்பது அனைவராலும் முடியும். வாஸ்து மீன்தான் வளர்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, எந்த வகை மீனையும் வளர்க்கலாம், குறிப்பாக வண்ண மீன்கள் பல வண்ணங்களில் வளர்க்கலாம், வளர்க்க இட வசதி இருந்தால், கூடுதலாக பூனை, நாய் போன்றவற்றையும் வளர்க்கலாம்.

இதுபோன்றவற்றை வளர்க்கும் போது மனிதர்களுக்கு கெட்ட சக்தியிலிருந்து விடுதலை கிடைப்பதுடன், வளர்ப்பு பிராணிகள் காட்டும் அன்பால் மனிதர்களுக்கு மனச் சோர்வும் நீங்கும், குழப்பமான மனநிலையில் இருக்கும் போது, குழந்தைகளுடனும், வளர்ப்பு பிராணிகளுடனும் சிறிது நேரம் விளையாடினால் மனம் தெளிவு படும் என்று பல்வேறு ஆராய்ச்சிகளும் நிருபித்துள்ளது.

குடும்பத்தில் தொடர், பிரச்சனைகளை சந்திப்பவர்கள் ஏதாவது ஒரு வளர்ப்பு பிராணிகளை வளர்த்துப் பாருங்கள் மிக விரைவில் தீர்வு கிடைக்கும்.

ஒருவருக்கு திடீர் சந்தேகம் வந்ததது மனைவிக்கு காது கேட்கவில்லையோ ?
ஆனால் இதை மனைவியிடம் நேரடியாக கேட்க தயக்கம் . தயக்கம் என்ன , பயம்தான் .

இந்த விஷயத்தை அவரின் குடும்ப டாக்டரிடம் சொன்னார். அதற்க்கு அவர் ஒரு எளிய யோசனை சொன்னார் .

இருபதடி தூரத்தில் இருந்து மனைவியிடம் ஏதாவது பேசிப்பாருங்கள் , மனைவியின் காதில் விழவில்லையெனில் சற்று நெருங்கி பதினைந்து அடி தூரத்தில் இருந்து பேசுங்கள் ,
பின் பத்து , ஐந்து இப்படி குறைத்துக்கொண்ட
ே நெருங்கிச்சென்ற
ு பேசுங்கள்.

எத்தனை அடி தூரத்தில் இருந்து பேசினால் மனைவிக்கு காதுகேட்கவில்லை என தெரிந்தால் அதற்கேற்றபடி சிகிச்சை அளிக்கலாம் என டாக்டர் சொன்னார். கணவனுக்கு ஒரே குஷி.

உற்சாகமாக வீடு திரும்பிய அவர் வீட்டு வாசலில் இருந்த படியே உள்ளிருந்த மனைவியிடம் இன்று என்ன சமையல்? எனக்கேட்டார்.
பதிலில்லை , பின் வீட்டு வரவேற்பறையில் இருந்து அதே கேள்வியை கேட்டார். அதற்க்கும் பதிலில்லை , ஹாலில் இருந்து கேட்டார் , சமையலறை வாசலில் இருந்தும் மீண்டும் மீண்டும் கேட்டார். மனைவியிடமிருந்த
ு பதிலே இல்லை.
போச்சு ரெண்டு ஸ்பீக்கரும் அவுட்தானென மனதில் கன்ஃபர்ம் செய்து விட்டார்.
கடைசி வாய்ப்பாக மனைவியின் காதருகே சென்று சத்தமாக " .... இன்றைக்கு என்ன சமையல் ?" ............என கேட்டார்.

காதில் ஏதோ குண்டு வெடித்தது போல் இருக்கவே அவர் மனைவி அவரை கோபமாக திரும்பிப்பார்த்து " ஏன் இப்படி கத்துறீங்க , நீங்களும் வாசல் கேட்டிலிருந்து , வரவேற்பறையில் இருந்து , ஹாலில் இருந்து , சமைலறை வாசலில் இருந்து கேட்க , கேட்க நானும் முருங்கைக்காய் சாம்பார் , உருளைக்கிழங்கு பொரியல் ன்னு சொல்லிக்கிடேயிருந்தேனே , காதில் விழவில்லையா ?
காதுல என்ன பஞ்சு மூட்டையா வெச்சுருக்கீங்க என பொரிந்து தள்ளிவிட்டாள்
இப்போது தெரிகிறதா !

 பிரச்சினை யார் காதில் என்பது ?

இப்படித்தான் *பிரச்சினை நம்மிடம் வைத்துக்கொண்டு அது பிறரிடம் இருப்பதாக நாம் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்*

#புதிய_தேடல்

First you have to find the problem then only its easy to solve.

நம் முன்னோர்கள் அஷ்டமி அன்றும், நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை? அதற்க்கு என்ன காரணம்?

அதில்தான் விஞ்ஞானம் இருக்கிறது. நம் முன்னோர்களின் வானியல் அறிவு அதில் பளிச்சிடுகிறது.

கிருஷ்ண பரமாத்மா அஷ்டமி அன்று பிறந்ததால் ஒரு மிகப்பெரிய போரை நடத்த வேண்டி இருந்தது.

ஸ்ரீ ராமன் நவமி அன்று பிறந்ததால் அவரது வாழ்வில் 14 வருடம் காட்டில் கழிக்க வேண்டி இருந்தது. இதுதான் காரணமா ? இல்லை !!!!

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை ஒரு நாள் என்று சொல்கிறோம்.

அதே பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருவதை ஒரு வருடம் என்கிறோம்.

நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றி வருவதை ஒரு மாதம் என்கிறோம். அதனால் தான் மாதத்திற்கு திங்கள் என்ற பெயர் உண்டு. ( திங்கள் என்றால் சந்திரன்)

நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றிவரும்போது ஒரு பாதி சுற்று ( 15 நாட்கள் அமாவாசையாகவும் ) அடுத்த 15 நாட்கள் பௌர்ணமி என்றும் சொல்கிறோம்.

அமாவாசைக்கும், பௌர்ணமிக்கு இடைப்பட்ட எட்டாவது நாளை அஷ்டமி என்று சொல்கிறோம். ஒரு மாதத்திற்கு இரண்டு அஷ்டமி வரும். தேய்பிறை அஷ்டமி என்றும் வளர்பிறை அஷ்டமி என்றும் சொல்கிறோம்.

சரியாக அஷ்டமி தினத்தன்று நாம் வாழும் பூமியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் வருகிறது.

அவ்வேளையில் சூரியனின் சக்தியும் , சந்திரனின் சக்தியும் பூமியை தங்கள் பக்கம் இழுப்பதால் ஒருவித Vibration ஏற்படுகிறது.

அந்த Vibration பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் எதிரொலிக்கும்.

பேருந்தில் நாம் பயணம் செய்யும்போது நம்மால் சரியாக எழுத்முடிவதில்லை அல்லவா ? அதைப்போன்று.

அதன்காரணமாக எந்த ஜீவராசியாலும் ஒரு நிலையான முடிவை எடுக்க முடியாது. அவ்வேளைகளில் நாம் எடுக்கும் முடிவும் நிலையற்றதாக இருக்கும்.

நவமி கழிந்தபிறகே பூமி தனது இயல்பு நிலைக்கு திரும்பும். அப்போதுதான் மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகள் மனமும் நிலை பெரும்.

அதனால் அஷ்டமி அன்றும், நவமி நவநாழிகை வரை எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் முடிவெடுத்தார்கள்.
அனைவருக்கும் காலை வணக்கங்கள்  உரித்தாகுக. இன்று முதல் கதை ஆரம்பம். எந்த நற்செயல் செய்யும் முன்பு,  இரு கைகலப்பு தொழல் வேண்டும் என்ற மரபிற்கேற்ப, கடவுள் வாழ்த்து பாடலையும் அதன் சிறப்பையும் அறியலாம்

பாடல் :

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா 
அலகு இலா விளையாட்டு உடையார்அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண்நாங்களே.


பொருள் :

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்(எல்லா உலகங்களையும் தாமே படைத்தலும்)
 
நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா(பாதுகாத்தலும், அழித்தலும் ஆகிய மூன்று தொழில்களையும் நீங்காத)
 
அலகு இலா விளையாட்டு உடையார்அவர் (முடிவு இல்லாத விளையாட்டுகளாக உடையவராகிய அவரே)
 
தலைவர் அன்னவர்க்கே சரண்நாங்களே (இவ்வுலகங்களுக்கு எல்லாம் தலைவர், அத்தன்மை பெற்ற இறைவர்க்கே நாங்கள் அடைக்கலம்)


இந்த கடவுள் வாழ்த்தில்கம்பர் ஒரு தெய்வத்தின் பெயரையும்குறிப்பிடவில்லை. ஒருவேளை கம்பர்மறந்திருப்பாரோ? யார் 11,000 பாட்டுகள்படைத்த கம்பர் தனது கடவுள் வாழ்த்தில்தனி பெரும் பொருள்இராம்ப்பெருமானே என்று பாடமறந்திருப்பாரா, இல்லை! ஒரு வேளைகம்பர் தெய்வத்தின் பெயரை பாடலில்சொருக முடியாதபடி தினறியிருப்பாரோ?கம்பர் கவிச்சக்கரவர்த்தி! அவருக்குதமிழிலும், கவியிலும், பொருளிலும்தடங்கல் என்பதே இல்லை. அவர்சொல்லும் பொருளையும், கவியைடும்உணர்ந்துக் கொள்ள வேண்டுமென்றால்நமக்கு வேண்டுமானால் சிரமமாகஇருக்கலாம்! கம்பர் நினைத்திருந்தால்"இராமா, இராமா" என்றே பாடல்முழுவதும் புகுத்தி அதை சிலேடைவடிவமாக்கி ஒரே சொல் பல்வேறுபொருளை உணர்த்தும வகையில்பாடலை இயற்றியிருக்கலாம்! பின்பு ஏன்கம்பர் இப்படி பொத்தம் பொதுவாககடவுள் வாழ்த்து பாடினார்?
                 கம்பர் அவை நாகரீகம்அறிந்தவர். கம்பராமயண அரங்கில்சைவ சமய பெருமக்களும்குழுமியிருப்பர். மற்ற சமயங்களானசமணம், பௌத்தம் போன்றவைகளில்இருந்தும் மக்கள் குழுமி இருந்தனர்.அதனால் கடவுள் வாழ்த்து என்பது இந்தசமயங்கள் எல்லாவற்றையும் ஒத்துஒருங்கிணைத்து, உருவங்கள்பலவானாலும், மார்க்கங்கள்வேவேரானாலும் பரம் பொருள் ஒன்றேஎன்று உரைக்கும் விதமாக எங்கும்நிறைந்திருக்கும் அந்த பரம்பொருளைஎண்ணி அமைய பெறல் வேண்டும். சமயபொதுவுடைமை (secularism) என்பதற்குஉலகத்திற்கே முன்னோடியாக தமிழும்,தமிழ் அறிஞர் பெருமக்களும்திகழ்ந்தனர் என்பதற்கு இது ஒருஎடுத்துக்காட்டு!

இராமனது வரலாற்றைக் கூறும் நுால் இராமாயணம் எனப்பட்டது. அயனம் என்பது வடமொழி சொல்,பயணம் என்னும் பொருள் தரும். இராமனின் வாழ்க்கை பயணம் குறித்த கதையாதலால் அப்பெயர் பெற்றது. கம்பராமாயணம் எனும் நுால் கம்பா்எனும் பெரும் புலவரால் இயற்றப்பட்ட தமிழ் நூலாகும். 

இதுவொரு வழி நுாலாகவே இருந்தாலும் கம்பா் தனக்கே உாித்தான பாணியில் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றியுள்ளாா். வடமொழி கலவாத துாய தமிழ்ச்சொற்களைத் தனது நுாலில் கையாண்டதால் கம்பா்,தொல்க்காப்பிய நெறி நின்றவா் என்று புகழப்படுகிறாா்.

கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுநந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களையும் நுாற்றுப்பத்தொன்பது (119) படலங்களையும் உடையது. காண்டம் என்பது பெரும்பிாிவினையும் படலம் என்பது அதன் உட்பிாிவினையும் குறிக்கும்.

கம்பாின் இராமாயணத்தைக் கம்பநாடகம் எனவும் கம்பச்சித்திரம் எனவும் கற்றறிந்த அறிஞா் பெருமக்கள் அழைப்பதுண்டு. 

வாழ்க்கையின் தத்துவங்களை,  ஒரு மனிதனுக்கு இருக்க வேண்டிய குணங்களை,  சகோதர ஒற்றுமையை,  விதியின் வலிமையை,  நட்பின் மேன்மையை இராமாயணம் எடுத்துக் காட்டுகிறது.

ஒவ்வொரு காண்டத்தையும், அதன் உட்பிரிவான ஒவ்வொரு படலத்தின் வருணனைகளையும், கம்பரின் கவிநடையில் பின்வரும் நாட்களில் காணலாம்.... 🙏🏻🙏🏻🙏🏻

நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால் உணரலாம். அதுதான்' கோத்திரம்' என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.

பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழி பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலி கண்ணி போல அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.

இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்த கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம் போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வ கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும் காதுகுத்து என்று தொடர்ந்து வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.

இந்த வரிசை தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்கு பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்க கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப்போக்கு உள்ளது?

இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்களும் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள். இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்?"

குலதெய்வம்

குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில்
அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை
சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது. இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும்காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ
அவரது குல தெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான் செய்வினை செய்வார். மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களைஎளிதில் பெற்று விடுகிறார்கள். மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு. அவை அந்த மந்திரவாதிகளை அழித்தவரலாறும் உண்டு.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை
சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். பிறந்த வீட்டில் ஒரு தெய்வம் புகுந்த வீட்டில் ஒரு தெய்வம். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவதுகிடையாது.

பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் சமாளிக்ககூடிய ஒரு ஆற்றலை தரும். இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திரு விழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அக்கோவிலுக்கு உதவுங்கள். பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் வாழ்க்கைபோகும் போக்கை…

அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது

எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக்கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தை பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஒரு வம்சத்தின் குலதெய்வம் என்பது 13 வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும்.

விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக் காண்போமா…..?

விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே. ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23 தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறி உள்ளது.

ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே. ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள் என்பதை நம் சனாதன தர்மம் திட்டவட்டமாய்க் கூறும். ஏனெனில் பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. ஏனெனில் அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக.

வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டுமே, முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகின்றது. இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கின்றனர்.

இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை. தன் தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது. ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை என்பதோடு தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y க்ரோமோசொம்கள் மட்டுமே.

ஒரு ஆணால் மட்டுமே இந்த y க்ரோமோசோம்களைத் தன் மகனுக்கு அளிக்க முடிகிறது. பெண்ணிற்கோ எனில் ஆணின் y க்ரோமோசோம்கள் கிடைப்பதில்லை. ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும். அதனால் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது.

நன்றி - 
சித்தர் அறிவியல்
இரத்தம் பற்றிய சில தகவல்கள் இது, இதை நீங்கள் படித்து உங்களின் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்,
❣இரத்த ஓட்டத்தை கண்டரிந்தவர் - வில்லியம் ஹார்வி
❣இரத்த வகைகளைக் கண்பிடித்தவர் - கார்ல்லாண்ட் ஸ்டீனர்
❣ இரத்த வகைகள் - A, B, AB, O
❣இரத்தத்தில் Rh Factor முதன்முதலில் எந்த உயிரியியல் இருந்து கண்டுபிடிக்க பட்டது - Rhesus குரங்கில்
❣ இரத்தத்தில் Rh காரணி இருந்தால் - பாசிடிவ் (Positive)
❣ இரத்தத்தில் Rh காரணி இல்லாத வகை - நெகடிவ் (Negative)
❣சராசரி எடையுள்ள மனித உடலில் இரத்த அளவு - 5 லிட்டர்
❣ இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின் என்ற நிறமி
❣ இரத்தத்தில் உள்ள திரவப் பொருள் - பிளாஸ்மா (Plasma)
❣ இரத்தத்தில் சராசரி குளூகோஸ் அளவு - 100-120mg%
❣மனித உடலில் சராசரி இரத்த அழுத்தம் - 120/80mm Hg
❣இரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்படுத்தும் ஹர்மோன் - இன்சுலின்
❣அனைத்து வகையான இரத்தத்தை ஏற்றுக் கொள்ளும் இரத்த வகை - AB
❣அனைவருக்கும் இரத்தம் வழங்கும் இரத்த வகை - O
❣ 120 mmHg என்பது - Systolic Pressure
❣80 mmHg என்பது - Diastolic Pressure
❣இரத்த செல்களின் வகைகள் - 3
1. சிவப்பு இரத்த செல்கள்
2. வெள்ளை இரத்த செல்கள்
3. இரத்த தட்டுகள்
1. இரத்த சிவப்பு அணுக்கள்:-
❣இரத்த சிவப்பு அணுக்கள் வேறுபெயர் - எரித்ரோசைட்டுகள்
❣ இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகும் இடம் - எலும்பு மஜ்ஜை
❣ இரத்த சிவப்பு அணுக்கள் வடிவம் - இரு பக்கமும் குவித்த தட்டையான வட்ட வடிவம்
❣ இரத்த சிவப்பு அணுக்கள் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின்
❣ ஆண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை - 5.2 மில்லியன்
❣பெண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை - 4.5 மில்லியன்
❣ஆண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் வாழ்நாள் - 120 நாட்கள்
❣பெண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் - 110 நாட்கள்
❣ இரத்த சிவப்பு அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - இரத்த சோகை (அனிமியா)
❣ இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்தால் ஏற்படும் நோய் - பாலிசைதீமியா
2. இரத்த வெள்ளை அணுக்கள்:-
❣இரத்த வெள்ளை அணுக்கள் வேறு பெயர் - லியூகோசைட்டுகள்
❣ இரத்த வெள்ளை அணுக்கள் உருவாகுமிடம் - எலும்பு மஜ்ஜை, நிணநீர் சுரப்பி
❣ இரத்த வெள்ளை அணுக்கள் வடிவம் - வடிவமற்றது
❣இரத்த வெள்ளை அணுக்கள் ஆயுட்காலம் - 2 (அ) 3 வாரம்
❣இரத்த வெள்ளை அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - லியூகோபினியா
❣ இரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானால் ஏற்படும் நோய் - லூகீமியா
❣ உடலின் போர்வீரர்கள் என்று அழைக்கப்படுவது - இரத்த வெள்ளை அணுக்கள்
❣ லியூகோசைட்டுகள் வகைகள் - 2
1. துகளுள்ள வெள்ளை அணுக்கள்
2. துகளற்ற வெள்ளை அணுக்கள்
❣துகளுள்ள வெள்ளை அணுக்கள் வகைகள் 3
☆ நியூட்ரோஃபில்கள்
☆ இயோசினாஃபில்கள்
☆ பேசோஃபில்கள்
❣துகளற்ற வெள்ளை அணுக்கள் வகைகள் - 2
☆ லிம்போசைட்டுகள்
☆ மோனோசைட்டுகள்.
❣ மனித உடலில் இரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை - 8000 - 10,000 வரை
❣இரத்த வெள்ளை அணுக்கள் விகிதாச்சார எண்ணிக்கை கீழ் வருமாறு:
❣ நியூட்ரோஃபில்கள் - (60 - 70%)
❣ இயோசினாஃபில்கள் - (0.5 - 3.0%)
 பேசோஃபில்கள் - 0.1%
❣லிம்போசைட்டுகள் - (20 - 30%)
❣ மோனோசைட்டுகள் - (1 - 4%)
3. இரத்த தட்டுகள் :-
❣ இரத்த தட்டுகள் வேறு பெயர் - திராம்போசைட்டுகள் (பிளேட்லெட்டுகள்)
❣இரத்த தட்டுகள் வாழ்நாள் - 5 - 9 நாட்கள்.
❣இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிப்பது - இரத்த தட்டுகள்
❣இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை - 2,50,000 - 5,00,000
❣ இரத்த தட்டுங்கyள் எண்ணிக்கை வெகுவாக குறைய காரணமான நோய் - டெங்கு ஜுரம்

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் \"\"நெல்லிக்கனி.\"\"  

2) இதயத்தை வலுப்படுத்த \"\"செம்பருத்திப் பூ\"\".  

3) மூட்டு வலியை போக்கும் \"\"முடக்கத்தான் கீரை.\"\" 
 
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் \"\"கற்பூரவல்லி\"\" (ஓமவல்லி).  

5) நீரழிவு நோய் குணமாக்கும் \"\"அரைக்கீரை.\"\"  

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் \"\"மணத்தக்காளி கீரை\"\".  
7) உடலை பொன்னிறமாக மாற்றும் \"\"பொன்னாங்கண்ணி கீரை.\"\" 
 
8) மாரடைப்பு நீங்கும் \"\"மாதுளம் பழம்.\"\" 
 9) ரத்தத்தை சுத்தமாகும் \"\"அருகம்புல்.\"\"  

10) கேன்சர் நோயை குணமாக்கும் \"\" சீதா பழம்.\"\"  

11) மூளை வலிமைக்கு ஓர் \"\"பப்பாளி பழம்.\"\"  

12) நீரிழிவு நோயை குணமாக்கும் \"\" முள்ளங்கி.\"\" 
 
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட \"\"வெந்தயக் கீரை.\"\" 

 14) நீரிழிவு நோயை குணமாக்க \"\" வில்வம்.\"\" 

 15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் \"\"துளசி.\"\"  

16) மார்பு சளி நீங்கும் \"\"சுண்டைக்காய்.\"\"  

17) சளி, ஆஸ்துமாவுக்கு \"\"ஆடாதொடை.\"\" 

 18) ஞாபகசக்தியை கொடுக்கும் \"\"வல்லாரை கீரை.\"\"  

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் \"\"பசலைக்கீரை.\"\"  

20) ரத்த சோகையை நீக்கும் \"\" பீட்ரூட்.\"\"  
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் \"\" அன்னாசி பழம்.\"\" 

 22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை) 

 23) கேரட்   மல்லிகீரை   தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.  

24) மார்புசளி, இருமலை குணமாக்கும் \"\"தூதுவளை\"\"  

25) முகம் அழகுபெற \"\"திராட்சை பழம்.\"\"  
26) அஜீரணத்தை போக்கும் \"\" புதினா.\"\"  

27) மஞ்சள் காமாலை விரட்டும் "கீழாநெல்லி"  

28) சிறுநீரக கற்களno ை தூள் தூளாக ஆக்கும் "வாழைத்தண்டு".  

கண்டிப்பாக பகிருங்கள் மற்றவரும் அறிந்துகொள்ளட்டும்.
�� வீட்டில் �� தனியாக இருக்கும் போது மாரடைப்பு ��

�� வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ❓

�� வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில ��  பிரச்சனைகள் காரணமாக உங்கள் �� மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,

�� நீங்கள் மிகவும் �� படபடப்பாகவும், �� தொய்வாகவும் உள்ளீர்கள்.

�� திடீரென்று உங்கள் �� இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

�� அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.

�� உங்கள் வீட்டில் இருந்து �� மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

�� ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் �� மூளை உங்களுக்கு சொல்கிறது

�� இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??

�� துரதிஷ்ட வசமாக �� மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..! 

✊ உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..

�� நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. 

�� இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:

"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக �� இரும்ப வேண்டும்,

�� ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் �� மூச்சை இழுத்து விட வேண்டும்,

�� இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும், 

�� இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது �� வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

�� ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

�� மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,

�� இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,

���� இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். 

�� இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..

�� பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள �� மருத்துவமனைக்கு செல்லலாம்..

�� இந்த தகவலை �� குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள். �� �� ��

❌ தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர், 
✅ உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....!!
           �� �� ��
�� வாட்ஸ்அப்பிர்க்காக �� பகிருபவர்
ஓம் சிவ ஓம்..
வெட்டியான் ஒருவன் பிணத்துக்காகக் குழி
தோண்டும்போது சிவலிங்கம் ஒன்றைக்
கண்டெடுத்தான். அதை அரசனிடம் எடுத்துச்
சென்றபோது "சுடுகாட்டில் கிடைத்ததை நீயே
வைத்துக்கொள் சுடுகாட்டுச் சாம்பலை வைத்து
அபிஷேகம் செய்" என்று ஏளனமாக அரசன்
கூறிவிட்டான். இறை வழிபாடு என்றால் என்ன என்று
தெரியாத வெட்டியானும் அரசனது வார்த்தைகள்
ஏளனமானவை என்பதை அறியாமல், பிணம் எரித்த
சாம்பலைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அபிஷேகம்
செய்து வழிபட்டான்ஒருநாள் திடீரெனப் பெய்த
மழையினால், சுடுகாட்டில் இருந்த சாம்பல் முழுவதும்
கரைந்து விட்டது.
 
சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்ய சாம்பல் இல்லையே என வருந்திய அவனும்
விராட்டிகளை அடுக்கி தீயை மூட்டிவிட்டு தனது மனைவியிடம் "நான் இந்த தீயில் விழுகிறேன். என்
உடல் எரிந்து கிடைக்கும் சாம்பலைக் கொண்டு
சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்" என்று கூறினான்.
ஆனால் மனைவியோ "நீங்கள் அப்படி இறந்து விட்டால்
இங்கு வரும் பிணங்கள் சீரழிந்துவிடும், நானே தீயில்
குதிக்கின்றேன்" என்று கூறிக் கொண்டே தீயில் வீழ்ந்தாள். 

இருவரது பக்தியிலும் திளைத்த பரமசிவன் பார்வதியுடன் பிரத்தியட்சமாகி மனைவியை உயிர்ப்பித்து இருவரையும் முக்தியடைய வைத்தார்.

இதைக் கேட்ட அரசனும் தங்கத்தால் ஆன
சிவலிங்கத்திற்குப் பன்னீர், பஞ்சாமிர்தம் என்றும்
வாசனைத் திரவியங்களாலும் அபிஷேகம் செய்த எனக்கு காட்சிதராத இறைவன், சுடுகாட்டுச் சாம்பலையும், பழைய சோற்றையும் கொடுத்தவனுக்கு
மோட்சம் அளித்துள்ளாரே, என்று வருந்தினாலும் 'பக்தி'
என்பது ஆடம்பரத்தில் இல்லை அன்பினால் மட்டுமே
மலரக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டான்...

ஓம் நம சிவாய நம ஓம்
🙏🌺🙏🌺🙏🌺🙏
*.*

ஒரு காட்டில் இரண்டு பெரிய பாறைகள் அருகருகே கிடந்தன. 

பல வருடங்களாக ஒரே இடத்தில் மழையில் ஊறி, வெய்யிலில் வாடிக் 
கிடந்த அந்தக் கற்களுக்கு ரொம்பச் சலிப்பாக இருந்தது. 

'நாம் எப்போதாவது இங்கிருந்து நகர்வோமா?' என்று மிகவும் 
ஏக்கத்தோடு பேசிக்கொண்டன.

அந்தக் காட்டுக்குப் பக்கத்தில் ஒரு நகரம். 

அங்கிருந்த மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு கோவில் 
கட்டத் தீர்மானித்தார்கள்.

புதுக் கோவிலுக்கு மூலவர் மற்ற சிலைகள் எல்லாம் 
வேண்டுமல்லவா? அதற்காக ஏழெட்டுச் சிற்பிகள் 
நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் சிற்பங்களைச் 
செதுக்குவதற்காக கற்களைத் தேடிக் காட்டுக்குள் 
வந்தார்கள்.

அவர்களில் ஒரு சிற்பி இந்தப் பாறைகளைக் கவனித்தார். 

மற்றவர்களிடம் அவற்றைக் காண்பித்துச் சொன்னார். 

'இந்தப் பாறைங்க ரெண்டும் சரியான அளவில இருக்கற
மாதிரி தெரியுது. நாளைக்கே ஆள் வெச்சுத் தூக்கிட்டுப் 
போயிடலாம்!'

சிற்பிகள் திரும்பிச் சென்றபிறகு முதல் பாறை பேசியது. 
'ஹையா ஜாலி ஜாலி! நம்ம பல நாள் கனவு நிறைவேறப் 
போகுது! நாளைக்கு நாம நகரத்துக்குப் போறோம்!'

இரண்டாவது பாறை கோபமாகச் சீறியது. 'அட மக்குப் பயலே! 
அவங்க உனக்கு நகரத்தைச் சுத்திக்காட்டறதுக்கா கூட்டிகிட்டுப் 
போறாங்கன்னு நினைச்சே? உன்னை அடிச்சு உடைச்சு செதுக்கி, 
சிலையா மாத்திப்புடுவாங்க. தெரியுமா?'

'அதுக்கு என்ன பண்றது? ஒண்ணைப் பெறணும்ன்னா 
இன்னொண்ணை இழந்துதானே ஆகணும்?' என்றது 
முதல் பாறை. 

'நான் வலியைப் பொறுத்துக்குவேன். பிரச்னையில்லை!'

'என்னால அது முடியாது!' தீர்மானமாகச் சொன்னது இரண்டாவது பாறை.

'நாளைக்கு அவங்க வரும்போது நான் இன்னும் ஆழமாப் 
போய் உட்கார்ந்துக்குவேன். அவங்க எல்லோரும் சேர்ந்து 
எவ்ளோ கஷ்டப்பட்டாலும் என்னைத் தூக்கமுடியாது.'

மறுநாள் அந்தச் சிற்பிகள் மீண்டும் வந்தார்கள். 

முதல் பாறையைக் கட்டித் தூக்கி வண்டியில் வைத்தார்கள். 

இரண்டாவது பாறையை அவர்களால் அசைக்கக்கூட முடியவில்லை.

'சரி விடுங்க. அதான் ஒரு பாறை கிடைச்சுடுச்சே. அதுவே போதும்.'

அவர்கள் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள்.

இப்போது அந்த முதல் பாறை அற்புதமான கடவுள் சிலையாக 
எல்லோராலும் வணங்கப்படுகிறது. இரண்டாவது பாறை இன்னும் 
காட்டுக்குள்தான் கிடக்கிறது.b

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும்.
இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்குவகிக்கின்றது.
மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. 
உடலிலுள்ள கோடிக்கணக்கானசெல்களைதினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கிபுத்துணர்வு  [Refresh]பெறவும்,உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.

இரவில் தூங்கும் போதுதான்உடலின் வளர்ச்சிஅதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.தூங்குவதற்கு ஏற்ற காலம்இரவு மட்டும்தான் என்பது இயற்கையின்விதிகளில்ஒன்று.பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறிஇரவில் குளிர்ச்சிபொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

ஆனால்  இன்றைய நாகரீக உலகில்இணையதள நிறுவனங்க ளில்வேலை பார்க்கும் பலரும்இரவில் கண் விழித்துபகலில் தூங்கு கின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி...,

 சித்தர் பாடல் ஒன்று;-

"சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரைநாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரைநம்பிக் காண்!"

இதன் விளக்கம் :-
இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில்
புத்தி மயக்கம்,தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல்,போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரைபற்பல நோய்கள்கவிக் கொள்ளும்.எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதைசித்தர்கள் அன்றேதெளிவாகக் கூறியுள்ளனர்.

"உத்தமம் கிழக்கு!
ஓங்குயிர் தெற்கு!
மத்திமம் மேற்கு!
மரணம் வடக்கு!

கிழக்குதிசையில் தலை வைத்து படுப்பதுமிகவும் நல்லது.தெற்குதிசையில் தலை வைத்துப் படுத்தால்ஆயுள் வளரும்.மேற்குதிசையில் தலை வைத்துப் படுத்தால்கனவு,அதிர்ச்சி உண்டாகும்.வடக்குதிசையில் ஒரு போதும் தலை வைத்துதூங்கக் கூடாது.இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

வடக்கு திசையில் இருந்து வரும்காந்தசக்தி தலையில்மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால்மூளைபாதிக்கப் படுவதுடன்,இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சிஉண்டாகும்.மேலும்மல்லாந்துகால்களையும்,கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.இதனால் இவர்களுக்குத் தேவையானஆக்ஸிஜன் [பிராண வாயு]உடலுக்குக் கிடைக்காமல்குறட்டை உண்டாகும். 
குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.

#நன்மை;-
இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும்இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாகஒருக்களித்துபடுத்து தூங்கவேண்டும்.இதனால்வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில்ஓடும்.இதில்எட்டு அங்குலம்மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால்நீண்ட ஆயுள்வளரும்.மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்துபித்தநீரைஅதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்துஇதயம் பலப்படும்.

#தீமை;-
வலது பக்கம் ஒருக்களித்துபடுப்பதால்இடது பக்க மூக்கின்வழியாகசந்திரகலை சுவாசம்ஓடும்.இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும்.இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.இரவில் உண்ட உணவு சீரணமாகாமல்புளித்துப் போய் விஷமாகநேரிடும்.

நன்றி!;-இமயகிரி சித்தர்&சித்தர் பிரபஞ்சம்.
அந்த காலத்தில் எந்த நோய்க்கும் நாட்டு வைத்தியம் தானே . மந்திரத்தில் வியாதி குணம் ஆனவர்களும் உண்டு. பத்தியத்தில் வியாதி குணமாகும். கோவில்களில் மண்டல
விரதமிருந்து பெற்ற ஈஸ்வர பிரசாதமும் மருந்தாக வியாதி நிவாரணம் செய்திருக்கிறதே. 

மலையாள தேசத்தில் ஒரு ஆச்சார நம்பூதிரி  குடும்பம். அதில் ஒருவருக்கு உடலில் பெரும் வாத நோய் கண்டது. அந்த நம்பூத்ரி கல்விமான். உயர்ந்த கௌரவமான மதிப்பான குடும்பம்.  கர்மா அவருக்கு இப்படியொரு வியாதி. எங்கெங்கோ மருத்துவர்களிடம் அலைந்தும் பயனில்லை. கொஞ்சம் பூஸ்திதி உண்டு. 

ஒரு நாள் அவர் வேலைக்காரனை கூப்பிட்டு ''ஏ குட்டா, உடனே போ. யாரோ ஜோசியர் ஊருக்கு வந்திருக்கிறாராம். பல வியாதிகளுக்கு அவரிடம் மருந்து இருக்கிறதாம். உங்கள் உடம்பை பற்றி கேட்கக்கூடாதா என்று தெரிந்தவர்கள் என்னிடம் சொல்கிறார்கள். என்னால் நடக்க முடியவில்லை. நீ அவரைப் பார்த்து என் நிலைமையைச் சொல். அவரிடம் ஏதாவது மருந்து வாங்கி வா'' என்று கோபாலனை அனுப்பினார். 

அவர் வேலைக்காரன் கோபால குட்டன் ஜோஸ்யரிடம் சென்றான். வேலைக்காரன் விவரங்களை சொல்லி ஜோசியர் என்ன சேதி சொன்னார் என்று அறிந்துகொள்ள ஆவலுடன் பட்டத்திரி என்கிற வியாதிக்கார நம்புதறி காத்திருந்தார். ஏன் அவன் இன்னும் வரவில்லை? 

சற்றைக்கெல்லாம் அந்த வேலைக்காரன் அலறி அடித்துக் கொண்டு அவரை நோக்கி ஓடி வந்து விட்டான். அவனைக் கண்ட பட்டத்ரி

''என்னப்பா ஆயிற்று? எனக்கு ஏதாவது நிவாரணம் உண்டு என்று ஜோசியர் சொன்னாரா? ''

'' ஐயா, அவர் உங்களுக்கு வியாதி குணமாகும். கண்டிப்பாகப் பரிகாரம் இருக்கிறது'' என்று கூறினார்.அதுவும் ஒரே ஒரு பரிகாரம் செய்தால் போதும் என்றும் கூறினார். ஆனால் அதற்குப் பிறகு அவர் சொன்ன பரிகாரம் தான் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது'' 

''அப்படி என்ன ஜோசியர் சொல்லி விட்டார்?''

கோபாலன் ஜோதிடர் சொன்ன விவரமெல்லாம் சொல்லி ''புனிதமான க்ஷேத்ரமான குருவாயூரில் நீங்கள் மீனை நாக்கில் வைத்துக் கொண்டு பாடினால் வியாதி குணமாகுமாம்'' என்றான். 

''குருவாயூர் கோயிலில் ஒரு சின்னக் குழந்தை அசுத்தம் செய்து விட்டாலே மூன்று மணி நேரத்திற்குக் கோயில் கதவை மூடி புண்யாகவாசனம்  செய்துவிட்டுத்தான் பிறகு திறப்பார்கள். அப்பேர்ப்பட்ட பெருமை மிகுந்த கோயிலில், உங்களை மீனை நாக்கில் தொட்டுப் பாடச் சொல்கிறார். 

அப்படிச் செய்வதற்கு நீங்கள் மேல்புத்தூரிலேயே உங்கள் வாத ரோகத்துடன் இருக்கலாம். நானே உங்களைப் பார்த்துக் கொள்கிறேன். இந்த ஜோசியர் இப்படிச் சொல்லுவார் என்று தெரிந்திருந்தால் நான் போயே இருக்க மாட்டேன். 
நான் ஏன் தான் அந்த ஜோசியரிடம் போனேனோ?'' கோபால குட்டன் அழாத குறையாக சொன்னான். 

பட்டத்திரி யோசித்தார். அவருக்கு சிரிப்புவந்தது. ஜோசியர் கூறியதன் உட்பொருள் புரிந்தது.

மனம் சந்தோஷம் அடைந்தது. ''கோபாலா, வாடா, நாம் இன்றே குருவாயூர் போகணும். பொட்டி படுக்கை எல்லாம் எடுத்துக்கோ''

''ஏய், இதென்ன அக்கிரமம். நான் வரமாட்டேனாக்கும்'' என்றான் கோபாலன். உங்களையும் போக விட மாட்டேன். அதெப்படி நீங்கள் குருவாயூர் க்ஷேத்ரத்தில் கோவிலுக்குள்ளே போய் அனாசாரம் பண்றது. நான் ஒப்புத்துக்க மாட்டேன். உங்களுக்கு வேணா எப்படியாவது வியாதி குனமாகாதா என்று இப்படி செய்ய பிடிக்கலாம். அந்த பாபத்துக்கு நான் துணை போக விரும்பலே.'' ரொம்ப கோபத்துடன் கோபாலன் கத்தினான். 

பட்டத்திரி என்ன சமாதானம் பண்ணியும் கோபாலன் கோபம் அடங்கவில்லை. '' ஜோசியன் சொன்னதுக்கு வேறே அர்த்தம்டா கோபாலா'' என்று திருப்பித் திருப்பி சொல்லி கடைசியில் கோபாலன் ஒரு வழியாக அமைதியானான். 

''ஜோசியன் சொன்னது நீ புரிஞ்சிண்ட மாதிரி இல்லே. அதற்கு அர்த்தம் வேறே. ''மத்ஸ்யம் தொட்டுப் பாடணும்'' என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? சாதாரண மீன் என்று நீ ஏன் நினைக்கிறே? பகவான் குருவாயூரப்பனின் தசாவதாரத்திலே முதல் அவதாரம் மத்ஸ்ய அவதாரம். அவர் மிகவும் இஷ்டப்பட்டு எடுத்த அவதாரமும் மத்ஸ்ய அவதாரம்தான். 

''மத்ஸ்யம் தொட்டு'' என்றால் மத்ஸ்ய அவதாரத்திலிருந்து தொடங்கி தசாவதாரம் பத்தையும் அவர் என்னைப் பாடச் சொல்லி இருக்கிறார். அதனால் நான் மத்ஸ்ய அவதாரம் தொடங்கி தசாவதாரங்களைப் பற்றி குருவாயூரில் பாடப் போறேன். நீ என்ன பண்றே. என்னை இப்பொழுதே குருவாயூருக்கு அழைத்துச் செல்.'' அப்பாடா, கடைசியில் சுலபமாக வாத நோய் குணமாக ஒரு பரிகாரம் கிடைத்ததே என்ற சந்தோஷம் அவருக்கு. 

''ஒ, நான் ஒரு முட்டாளாக்கும் . இப்படி ஒரு அர்த்தமோ இதுக்கு. அதுவும் நம்பூதிரி, அதுவும் குருவாயுரப்பன் கோவில்லே உள்ளே மீனை வாயில் வைத்துக்கொண்டு............'' என்று அந்த ஜோசியன் சொன்னதை வேறே மாதிரி புரிஞ்ஜிண்டுட்டேன். நம்பிவிட்டேன் . அதாக்கும் கோபம் வந்துது. ''

பட்டத்திரிக்கு இன்னுமொரு சந்தோஷம் என்ன வென்றால் அவருடைய குரு கற்றுக் கொடுத்த சமஸ்கிருத மொழியில் பாட அந்த பகவானே நம்மைப் பணித்திருக்கிறார் என்று. அவர் கண்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தது.. அந்த குருவாயூரப்பனைப் பாடப் பாட , நம் ரோகம் நிவர்த்தி ஆகும் என்று நினைத்ததுமே மனம் ஆனந்தக் கூத்தாடியது. பகவானின் பெருங் கருணையை எண்ணி மனம் பரவசம் அடைந்தது. 

''நாராயண பட்டத்திரிக்கு எந்த மருந்திலும் குணமாகாத வாத நோய், வெறுமே பாட்டுப்பாடுவதால் மட்டும் குனமாகப்போகிறதா என்ன ? '' என்று ஏற்கெனவே நொந்து போயிருந்த அவர் குடும்பம் ,உறவினர்கள் அவநம்பிக்கையுடன், வெறுப்புடன், வேறு வழியில்லாமல் அவர் குருவாயூர் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்தனர். 

நடக்க முடியாதே பட்டதிரிக்கு. ஒரு பத்துப் பதினைந்து பேர் அவரை ஒரு பல்லக்கில் தூக்கி வைத்துத் கொண்டு குருவாயூர் சென்றனர். ''எப்போ குருவாயூர் வரும், எப்போ நாராயணனைப் பார்ப்போம்'' --- பட்டத்ரியின் மனம் பல்லக்கை விட வேகமாகச் சென்றது. குருவாயூரப்பனின் தரிசனத்திற்காக மனம் ஏங்கியது. மனத்தில் இருந்த பயம் விலகியது. இந்த ரோகத்தால் இனி நம்மை ஒன்றும் செய்ய முடியாது. அந்தக் குட்டிக் கிருஷ்ணன் நம்மைப் பார்த்துக் கொள்வான். நாளைக் காலை நிர்மால்ய தரிசனத்தின்போது நாம் அந்த குருவாயூரப்பன் சன்னதியில் இருப்போம்'' என்று எண்ணிக் கொண்டார்.

அடுத்த நாள் விடியற்காலையில் அவர்கள் குருவாயூர் சென்றடைந்தனர். அவரை நாராயண சரஸில் ஸ்நானம் செய்ய வைத்தனர். '' ஆஹா என் பகவானே ஸ்நானம் செய்த குளமாச்சே இது ? இதில் ஸ்நானம் செய்ய நாம் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்'' -- அவர் மனம் துடித்தது. புது வஸ்த்ரம் உடுத்தினர். அவரை தூக்கிக் கொண்டு கருடரை வணங்கி, பின் பிரதான வாயிலைத் தாண்டி கொடிக் கம்பத்தைக் கடந்து கர்ப்பகிரகத்தின் சிறிய வாயில் நுழைந்தனர். 

தினமும் காலையில் மூன்று மணிக்கு நிர்மால்ய தரிசனத்திற்கு வைகுண்டத்திலிருந்து அந்தர்யாமியாக (கண்ணுக்குத் தெரியாமல்) வந்து குருவாயூரப்பனை தொழுது செல்லும் முப்பத்து முக்கோடி தேவர்கள்,  அனைவரும் அவனைத் தொழ வருவார்களே. அவர்களில் ஒருவராக பட்டத்திரியும் உள்ளே நுழைந்தார். இவரைக் கண்ட தேவர்கள், இவரால் நாராயணியம் என்னும் மாபெரும் க்ரந்தம் ஒன்று பின்னால் உருவாகப் போகிறது என்பதை உணர்ந்து மிகவும் சந்தோஷம் அடைந்தனர்.

குருவாயூரப்பனின் தரிசனம் ஒரு விநாடி நேரமாவது கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் பக்தர்களுக்கு நடுவே பட்டத்திரியும் உள்ளே நுழைந்தார். அப்பொழுது அவரைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் அங்குள்ள திண்ணையைக் கண்டனர்.

பகவானுக்கு வலப் பக்கம் தமக்கு இடப்பக்கம் உள்ள அந்தத் திண்ணையில் அவரை அமர வைத்தனர். பட்டத்ரி முதன்முறையாக குருவாயூர் வருகிறார். அவர் இதற்கு முன் குருவாயூரப்பனைப் பார்த்தது இல்லை. ஆனால் கேள்விப்பட்டிருக்கிறார். அவரது உடல் பரவசத்தால் சிலிர்த்தது. சாதாரண மானிடனான என்னை அந்த பகவானின் கருணையன்றி வேறு எது இங்கு அழைத்து வரமுடியும்? இவரது திவ்ய ஸ்வரூபத்தைக் காண கண் கோடி வேண்டுமே? எத்தனை அழகு? எவ்வளவு தேஜஸ்? இப்பேர்ப்பட்ட அழகு வாய்ந்த இவரைப் பாட என்னால் முடியுமா? அதற்கு நான் தகுதி உடையவனா? அந்த பகவான் என்னை ஏற்றுக் கொள்வானா? அவர் என்னையும் தன் சரணாரவிந்தங்களில் சேர்த்துக் கொள்வானா? இப்படி பட்டத்ரி மனத்திற்குள் ஆயிரம் கேள்விகளை எழுப்பிக் கொண்டே அந்த குருவாயூரப்பனைக் காணத் துடிக்கிறார் பட்டத்திரி. 

அந்த மண்டபத்தில் அமர்ந்து கொண்டு, '' என் கண்ணா'' என பக்தியுடன் கதறினார்.  சப்தம் பக்தியோடு வெளிவந்தது. அவரது கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. குருவாயூரப்பன் அவருக்கு செவி சாய்த்தானா?

பட்டத்ரி அந்த மண்டபத்தில் உட்கார்ந்தவுடன் அவருக்கு குருவாயூரப்பனின் தரிசனம் கிடைக்கவில்லை. அந்த மண்டபமானது குருவாயூரப்பனுக்கு வலது பக்கத்தில் இருந்தது. பட்டத்ரிக்கோ வாத ரோகம் . தன் கழுத்தைத் திருப்பி குருவாயூரப்பனை தரிசனம் செய்ய இயலவில்லை. 

அப்போது பட்டத்ரி அந்த குருவாயூரப்பனை மனதில் நினைத்துக் கொண்டு, ''ஏ உன்னிக் கண்ணா! கிருஷ்ணா! பரந்தாமா!'' என்று கதறுகிறார். 

'' இதோ பார் குட்டி கிருஷ்ணா உன் திவ்ய தரிசனத்தைக் காணாமல் என்னால் எப்படி நாராயணியம் எழுத முடியும் னு நீ நினைக்கிறாய்? அதனால் நீ முதல்லே எனக்கு உன் திவ்ய தரிசனத்தைத் தா'' என்று அழுது கண்ணீர் மல்குகிறார். 

அதற்கு குருவாயூரப்பன் ஒன்றும் பேசவில்லை. வாத ரோகம் உள்ள காரணத்தால் பட்டத்ரி மனம் வருந்தி கண்ணனிடம்

'' சரி கிருஷ்ணா, நீ எனக்கு ஒன்றுமே செய்ய வேண்டாம். என் வலது பக்க கழுத்தில் மட்டுமாவது லேசாக அசைவு வரும்படி செய். கழுத்தையாவது திருப்பி உன்னைப் பார்க்க அனுகிரகம் செய். நான் இப்போ தான் முதன் முதலில் குருவாயூர் வந்திருக்கிறேன். இதற்கு முன் உன்னைப் பார்த்தது கூட கிடையாது. என் காதால் மட்டுமே இதுவரை உன் புகழைக் கேட்டிருக்கிறேன். உன் சௌந்தர்ய ரூபத்தைப் பார்க்காமல், உன் மேனி அழகைக் காணாமல், நீ சூடி இருக்கும் ஆடை, ஆபரணங்களைக் காணாமல், உன் தேஜோமய திவ்ய சொரூபத்தைக் காணாமல், கருணா கடாக்ஷத்தைக் காணாமல் நான் எப்படி அப்பா உன் பெருமையைப் பாட முடியும்? உன் புராணமாகிய நாராயணியத்தை, நான் எதை நினைச்சு எழுத முடியும்? நீயே சொல்லு, அதனால் தான் கேட்கிறேன் நீ உன் தரிசனத்தை முதலில் எனக்கு கொடு'' என்று மனம் குழைய கெஞ்சிக் கேட்டார் .

குருவாயூரப்பன் சும்மாவா இருப்பான் ? அவனுக்கு நாரயணீயம் வேண்டாமா. அதற்காக தானே இத்தனை வேலை செய்து, அவருக்கு வாத ரோகத்தை வேறு கொடுத்து இழுத்து வந்திருக்கிறான். முதன் முதலில் பட்டத்ரியிடம் பேசுகிறான் .

''நாராயண பட்டத்திரி, நீ நினைக்கிற மாதிரி எல்லாம் என்னால் இப்பொழுது உன் கழுத்தை சரி செய்ய முடியாது. என்றைக்கு நீ இங்கே வந்த காரியம் முடிவடைகிறதோ, அன்றுதான் உன் வியாதி நீங்கும் சரியா ?''

'' அடே, குட்டி கிருஷ்ணா, எனக்கு உன் தரிசனம் எப்போது கிடைக்கும்? ''

'' பட்டத்ரி, நீ உன் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு உன்னுடைய கழுத்தை சாய்த்துதான் என்னைப் பார்க்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்? என் கழுத்தின் ரெண்டு பக்கமும் நன்றாகத்தானே இருக்கிறது. அதனால் என் கழுத்தைத் திருப்பி என்னால் உன்னைப் பார்க்க முடியும்அல்லவா ?. பட்டத்திரி. நானே என் தலையைச் சாய்த்து உன்னைப் பார்க்கிறேன். என்று கூறி பாண்டுரங்கனாக மாறி இடுப்பில் கையை வைத்துக் கொண்டு தலையை சாய்த்து பட்டத்ரியைப் பார்த்து, நீ நாராயணியம் பாட ஆரம்பி'' என்று கூறி கிருஷ்ணன் அனுக் ரஹம் செய்கிறார். 

(இப்பொழுதும் குருவாயூர் ஆலயத்தில் 'நாராயண பட்டத்ரி மண்டபத்தில்' உட்கார்ந்து கொண்டு பார்த்தால் நமக்கு அந்த குருவாயூரப்பன் தெரிய மாட்டான். ஆனால் குருவாயூரப்பன் நின்று கொண்டிருக்கும் இடத்தில் இருந்து நம்மைக் காணமுடியும்.)

அப்பேர்ப்பட்ட புனிதமான இடமானதால் இப்பொழுது அங்கு ஒரு செப்புப் பட்டயம் வைத்து, 'நாராயண பட்டத்ரி நாராயணியம் எழுதிய இடம்'' என்று எழுதி வைத்திருக்கின்றனர். சாட்சாத் அந்த குருவாயூரப்பனே, பட்டத்ரி நாராயணியம் எழுதி முடித்தவுடன், ''மேல்பத்தூர் நாராயண பட்டத்திரி , இந்த ஊரில் உள்ள எல்லா இடமும் எனக்குச் சொந்தம். ஆனால் இன்று முதல் இந்த இடம் உனக்கு மட்டுமே சொந்தம். இதற்கு இனிமேல் ''பட்டத்ரி மண்டபம்'' என்று பேர்'' குருவாயுரப்பனே கூறினார்.)

எந்த காவியத்துக்கும் இல்லாத பெருமை இந்த நாராயணியத்திற்கு உண்டு. என்ன வென்றால், இந்த நாராயணியம் என்கிற க்ரந்தம் முழுவதுமே நாராயண பட்டத்ரியும் குருவாயூரப்பனும் பேசும் பாவனையில் எழுதப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அவர்களுக்குள் நடக்கும் சம்பாஷணை போல் அமைந்திருக்கிறது.

'' நான் நாராயணியம் எழுத ஆரம்பிக்கட்டுமா? என்று பட்டத்ரி கேட்க, 
'' உம். எழுது. நான் கேட்க ஆவலாக இருக்கிறேன்'' என்று குருவாயூரப்பன் கூறுகிறான். 
'' நான் நாராயணியத்தைத் தொடங்க வேண்டும் என்றால் சில பல நிபந்தனைகள் உள்ளன. அவற்றை எல்லாம் நீ பூர்த்தி செய்தால் மட்டுமே என்னால் நாராயணியம் பாட முடியும். இல்லையென்றால் நான் ஊருக்குச் செல்கிறேன்''

ஒரு முக்ய விஷயம். மற்றவர்கள் எல்லாம் தங்கள் வாழ்வில் சில சமயங்களில் தங்கள் இஷ்ட தெய்வத்தோடு பேசியிருக்கிறார்கள். ஆனால் குருவாயூரில் பட்டத்ரி நூறு நாளும் தொடர்ந்து குருவாயூரப்பனோடு பேசும் மகா பாக்யத்தைப் பெற்றார்.! பேசியது மட்டுமல்ல ஒரு நண்பனாக, தந்தையாக, குழந்தையாக, பணியாளாக என அத்தனை பாவங்களிலும் அவரோடு பேசுகிறார். 

குருவாயூரப்பன் ப்ரத்யக்ஷ தெய்வம் 

"ஸ்ரீ குருவாயூரப்பன் திருவடிகளே சரணம்" 


⭐சசிகுமார் அடுத்தாக 'குட்டிப்புலி' இயக்குனர் 🎬முத்தையா இயக்கத்தில் 🎥'கொடி வீரன்' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தில் ⭐சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்தில் 👿ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தை சசிகுமார் தன்னுடைய கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளார். வரும் ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.   


சேலம் அருகே தாரமங்கலம் வழியாக, பல கோடி ரூபாய்💰 மதிப்புள்ள மரகத லிங்கம்🙏 கடத்தப்படுவதாக 👮போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பால்பண்ணை என்ற இடத்தில் வந்துகொண்டிருந்த 🚗காரை மறித்து 👮போலீசார் சோதனையிட்டனர். அதில் 7⃣ கிலோ எடை கொண்ட பச்சை மரகதலிங்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த மரகதலிங்கத்தை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.25 கோடி💰 இருக்கும் என ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தெரிவித்தார். இதுதொடர்பாக காரில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட 5⃣ பேர் கைது⛓ செய்யப்பட்டனர்.   


 மனைவி இறந்த இரண்டு மாதங்களில் சந்திர ஹாஸன் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

கமல் ஹாஸனின் சகோதரர் சந்திரஹாஸன்(82) மாரடைப்பால் நேற்று இரவு மரணம் அடைந்தார். லண்டனில் உள்ள தனது மகளும், நடிகையுமான அனு ஹாஸனின் வீட்டில் அவர் தங்கியிருந்த நிலையில் மரணம் அடைந்துள்ளார்.

கமலின் இரண்டாவது அண்ணனான சந்திர ஹாஸன் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேனல் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தார். தம்பி கமலுடன் சேர்ந்து படங்களை தயாரித்து வந்தார்.

சந்திர ஹாஸனின் மனைவி கீதாமணி கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி மரணம் அடைந்தார். மனைவி இறந்த 2 மாதங்களில் சந்திர ஹாஸனும் இறந்துள்ளார்.

அனு ஹாஸனுக்கு நிர்மல் ஹாஸன் என்ற சகோதரர் உள்ளார்.l

சந்திர ஹாஸன், நிர்மல் ஹாஸனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை கடந்த ஆண்டு கமல் சமூக வலைதளத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


கமல்ஹாசன் நடிப்பில் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்த ராஜ் கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தை நிர்வகித்து வந்த சந்திர ஹாசன்(82), லண்டனில் உள்ள தனது மகள் நடிகை அணு ஹாசன் வீட்டில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். சந்திர ஹாசனின் மனைவி கீதா மணி, கடந்த ஜனவரி மாதம் சென்னையில் காலமானார். பரமக்குடியில், 1936-ம் ஆண்டு பிறந்த சந்திர ஹாசன் வழக்கறிஞர் பட்டம் பெற்றவராவார்.  
*Professional Ethics:* 😜

தொண்டன்: எதுக்குண்ணே ஓட்டுக்கு போய் ஐஞ்சாயிரம் தர்றீங்க?
வாங்கிட்டு போடலன்னா?"

தலைவன்: "அட...விடுடா...
வாங்குன பணத்தை வச்சு என்ன செய்வான்? 
குடிப்பான்.
அவன் குடிக்குற பார் நம்மளது.

ஓவரா குடிச்சா குடல் வெந்து ஆஸ்பத்திரி சேர்வான்.
ஆஸ்பத்திரியும் நம்மளது.

அதுவும் இல்லாட்டி--ஸ்கூல்-காலேஜ் பீஸ் கட்டுவான்.இது ரெண்டுமே நம்மளது...

கவலப்படாத-எங்க சுத்துனாலும்,நம்ம பணம் நம்மட்ட வந்துரும்...

என்ன நடுவுல ஒரு ரெண்டு நாளு அவன் பாக்கெட்ல இருக்கும்... அவ்வளவு தான்...

*#படித்ததில்  நொந்தது..*😂 😅 


நெல்லை மாவட்டம் கடையம் ஊராட்சி பெத்தான்பிள்ளை குடியிருப்பில் சுமார் 150க்கும் மேற்பட்ட 🏠வீடுகளில் 700க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சுமார் 3⃣ ஆண்டுகளுக்கும் மேலாக காட்டுப்பன்றி, மிளா, சிறுத்தை, கரடி போன்ற வன விலங்குகள் புகுந்து வருகின்றன. வயல்கள் மற்றும் தோட்டங்களில் விளைவிக்கப்படும் நெல், வாழை, எலுமிச்சை உள்ளிட்ட பொருட்களையும் சேதப்படுத்திவிடுகின்றன😟. நூற்றுக்கும் மேற்பட்ட 🐐ஆடு, 🐮மாடு, 🐶நாய் வளர்ப்பு விலங்குகளை தூக்கிச் செல்வதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதையடுத்து வனத்துறையினர் கூண்டு வைப்பதற்காக அங்கு சென்றனர். அப்போது பொதுமக்கள், வனத்துறையினரை தடுத்து நிறுத்தி, சிறுத்தை வருவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வலியுறுத்தினர். வனவிலங்குகளால் உயிருக்கு ஆபத்து ஏற்ப்டுமோ என்று அச்சம் இருப்பதாகவும், அதிகாரிகள்👮 உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.


ராஜமௌலி இயக்கத்தில்🎬 பிரபாஸ், 💃அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்துள்ள பிரமாண்ட திரைப்படம் 'பாகுபலி-2'. இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு பெரும் சாதனையை அடைந்துள்ளது😳. இதனையெடுத்து, இப்படத்தின் வெளியீடு தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது😍. வரும் ஏப்ரல் 28ந் தேதி இப்படம் திரைக்கு வரும் என்று அதிகாரபூர்வ🤗 தகவல் வந்துள்ளது. மேலும், இதில் இன்னுமொரு சிறப்பு என்னவென்றால் 'பாகுபலி-2' முற்றிலும் புதுமையான முறையில் ஐமேக்ஸ் வடிவத்தில் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்குகளில் திரையிட போகிறார்களாம். 



இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்😳. தமிழக விவசாயிகளுக்கு🏛 மத்திய அரசு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு போராட்டம் நடத்தி வருகிறார்கள்😯. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு ராஜலட்சுமி என்ற விவசாயி🔈 கூறுகையில், "எங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி மத்திய 🏛அரசிடம் கொடுத்தோம். ஆனால், அரசு எங்கள் கோரிக்கைகளை கண்டுக்கவில்லை😟. நாலு நாட்களாக பசியும் பட்டினியுமாய் உள்ளோம்😟. பனியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். போராட்டத்தில் இருந்த 4 பேரை ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளோம்😳. எங்கள் மரணத்தை😢 பார்த்தாவது உங்களுக்கு ஈவு இரக்கம் வருமா?", என்று கூறியுள்ளார். இந்தநிலையில் இன்று மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணா இவர்களுது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததாகவும், அதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கை விட்டதாகவும் கூறப்படுகிறது😳.


மணி அடித்து பூஜை 
செய்வது என்பது நாம் 
அனைவரும் அறிந்த ஓன்று .
அந்த மணிக்கே பூஜை செய்யவேண்டும் என்று பூஜா முறைகள் கூறுகின்றன . 

பூஜை ஆரம்பிப்பதற்கு 
முன்னால் மணி அடித்தால், 
அந்த மணி சப்தம் கேட்டதும் 
வீட்டில் எதாவது துர் தேவதைகள் போன்றவை இருந்தால் 
அது வெளியே ஓடிவிடும்.

துர்தேவதை, 
போன்றவைகளுக்கு மணி சப்தம் கேட்டால் பயம்; 
அதனால், மணியடித்து 
அவைகளை விரட்டி விட்டு பூஜையை ஆரம்பிப்பர்.

ஒவ்வொரு நாளும் ஏன் இப்படி அடிக்க வேண்டும் என்றால், ஓடிப்போன துர்தேவதைகள் இருட்டிய பின் மீண்டும்
ஒருவேளை வந்து விடலாம். 
அவை இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே என்றால், 
அவை இருக்குமிடத்தில் தெய்வங்கள் வரமாட்டார்கள்! தினமும் மணி அடிப்பதால் 
அந்த மணி துர் சக்திகளை முற்றிலுமாக விரட்டியடிப்பதோடு மட்டுமில்லாமல், 
தேவர்களையும், 
தேவ கணத்தினரையும் அழைக்கவே பூஜையின் 
போது மணியடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

அதனால்.! 
மணியடித்துதான் தினமும் பூஜையை ஆரம்பிப்பது வழக்கம். பூஜையின்போது, 
இறைவனுக்கு படையல் போடுவதை நைவேத்யம், நிவேதனம் என்று சொல்வர். நிவேதனம் என்ற சொல்லுக்கு அறிவித்தல் என்று பொருள். 
அந்த அறிவிப்பை நமக்கு வெளிப்படுத்துவதே மணியாகும்.

கிராமங்களில் கூட இந்த துர்தேவதைகள் சுற்றிக் 
கொண்டே இருக்கும். 
அப்படி கோயில்களில் காலை, மாலை மணியடிக்கும் போது, 
இந்த சப்தம் கேட்டதும் அந்த துர்தேவதைகள் கிராமத்தை விட்டு ஓடி விடும்.

இத்தகைய சிறப்பு மிக்க அந்த மணிக்கே பூஜை செய்யவேண்டும் என்று பூஜா முறைகள் 
கூறுகின்றன ! 

இந்த பூஜா மணியின் 
அதிதேவதை வாசுதேவர் !

மணியின் நாக்குக்கு 
     அதிதேவதை சரஸ்வதி ! 

அடித்தல் அல்லது ஒலித்தலுக்கு அதிதேவதை சூரியன்.!

நாதத்துக்கு அதிதேவதை ஈஸ்வரன் !

எனவே , 
மணிக்கும் பூஜை செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

காண்டா மணி 
    பூஜைக்கான மந்திரம்:

"ஆகமார்த்தம் துதேவாநாம்  
     கமநார்த்தம் து ரக்ஷஸாம்
      காண்டாரவம் கரோம்யத்ய
        தேவதாஹ் வானலாஞ்ச நம:"

உள்ளத்தில் தூய்மையான 
உணர்வு எழுவதற்கும், 
தீய உணர்வுகள் வெளியேறவும் மணியை ஒலிக்கிறேன் என்பதே அப்போது சொல்லும் 
ஸ்லோகத்தின் பொருள். 

மணி தொடர்ந்து ஒலிக்கும் இடத்தில் தீயசக்திகள் நீங்குவதோடு, 
அந்த இடம் முழுவதும் நல்ல சக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

                       நன்றி

   அழகிய கிராமத்திற்கு
ஒரு முனிவர் வந்திருந்தார்
.ஊருக்கு மத்தியில் இருந்த
மரத்தடியில் அமர்திருந்தார்
.யாருமே ஊரில் அவரைக்
கண்டுகொள்ளவில்லை . முனிவர்
அல்லவா ?
கோபத்தில் சாபமிட்டார் அந்த
ஊருக்கு .." இன்னும்
50வருடங்களுக்கு இந்த
ஊரில் மழையே பெய்யாது
.வானம் பொய்த்துவிடும் " … இந்த
சாபம் பற்றி கேள்விப்
பட்ட அனைவரும் என்ன
செய்வது என்றே தெரியாமல்
கவலையோடு அவரின்
காலடியில் அமர்ந்து
மன்னிப்பு கேட்டனர் .. சாபத்திற்கு
விமோசனம்
கிடையாது என்று
கூறிவிட்டார் முனிவர்
.வேறு வழியின்றி
அனைவருமே அவரின்
காலடியில் அமர்ந்து இருந்தனர் …
மேலிருந்து
இதைக் கவனித்த பரந்தாமன்
தனது சங்கினை எடுத்து
தலைக்கு வைத்து
படுத்துவிட்டான்
( பரந்தாமன் சங்கு ஊதினால் மழை
வரும் என்பது
நம்பிக்கை ). இன்னும் 50
வருடங்கள்மழை பெய்ய
வாய்ப்பில்லை என்பதால்
இனி சங்குக்கு ஓய்வு
என்றே வைத்து விட்டான் …) அந்த
ஊரில் ஒரு அதிசயம்
நடந்தது …
ஒரே ஒரு உழவன்
மட்டும் கலப்பையைக்
கொண்டு தினமும்
வயலுக்குச் சென்று வந்து
கொண்டிருந்தான் .அவனை
அனைவரும் பரிதாபமாகவே
பார்த்தனர் .மழையே
பெய்யாது எனும்போது
இவன் வயலுக்கு போய் என்ன
செய்யப் போகிறான் என்ற
வருத்தம் அவர்களுக்கு … அவனிடம்
கேட்டே விட்டனர் . நீ செய்வது
முட்டாள்தனமாக
இல்லையா என்று ..அதற்கு
அவனின் பதில்தான்
நம்பிக்கையின் உச்சம் "' 50
வருடங்கள் மழை பெய்யாது
என்பது எனக்கும் தெரியும் .
உங்களைப் போலவே நானும்
உழுதிடாமல் இருந்தால் 50
வருடங்கள் கழித்து உழுவது
எப்பிடி என்றே எனக்கு
மறந்து போயிருக்கும்
..அதனால்தான் தினமும் ஒருமுறை
உழுது
கொண்டு இருக்கிறேன் "
என்றான் .
இது வானத்தில் இருந்த
பரந்தாமனுக்கு கேட்டது
.அவரும் யோசிக்க ஆரம்பித்தார் .."50
வருசம்
சங்கு ஊதமால் இருந்தால்
எப்பிடி ஊதுவது என்று
மறந்து போயிருமே ".என்றே
நினைத்து சங்கை எடுத்து
ஊதிப் பார்க்க ஆரம்பித்தார் …. இடி
இடித்தது …மழை பெய்ய
ஆரம்பித்தது …நம்பிக்கை
ஜெயித்து விட்டது .
" தெய்வத்தால் ஆகாது
எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும் "
"Self confident never fail"
வெற்றி நிச்சயம் !!



நீங்கள் திருஅண்ணாமலையில் கிரிவலம் சென்றால் அப்போது உங்களுடைய அத்தனை பிறவி வடிவங்களும் கூடவே சேர்ந்து வருகின்றன.ஒவ்வொருவரின் ஒட்டு மொத்தப் பிறவிச் சாரமே கூடவே சேர்ந்து அருணாச்சலத்தை வலம் வருமாம்!!! 

இதற்குக் காரணம், அத்தனை கோடிப் பிறவிகளுக்கும் முற்றுப்புள்ளி இடும் ஆன்மசாதனமே அண்ணாமலை கிரிவலம் என்பதால்தான்!
நமது பிரபஞ்சத்தில் அருணாச்சலமான திரு அண்ணாமலையில் மட்டுமே இது சாத்தியமாகும்.இது நிகழ்ந்தாகிப் பிறவிப்பெரும்பயன் அடைய வேண்டுமென்றால், பவுர்ணமி தினம் போன்று மாதசிவராத்திரி நாளிலும் அருணாச்சல கிரிவலத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
நன்றி:பக்கம் 11,ஸ்ரீ அகஸ்திய விஜயம் ஜனவரி 2010 மாத இதழ்.


காலம்,தேசம், அண்டம் என்ற பரிமாணங்களைத் தாண்டியவர்கள் சித்தர்கள்!

ஒருமுறை திருமூலர் ஆகாய மார்க்கமாகப் பறந்து அண்டம் (உதாரணமாக மில்கிவே என்பது நமது அண்டம்.நமக்கு அருகில் இருக்கும் அண்டத்தின் பெயர் அண்ட்ரோமேடா.நம்மிடமிருந்து 2000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கிறது.அதாவது விநாடிக்கு 3 லட்சம் கி.மீ.வேகத்தில் செல்லும் ராக்கெட்டில் இங்கிருந்து புறப்பட்டால், அங்கே செல்ல 2000 வருடங்கள் தான் ஆகும்.நாம் வாழும் சூரியக்குடும்பம் இருப்பது பால்வழித்திரள் எனப்படும் மில்கிவே அண்டத்தில் அதாவது கேலக்ஸியில்.நமது வீடான பால்வழித்திரளின் அகலம் 1,00,000 ஒளி ஆண்டுகள் தான்.நமது பால்வழித்திரளின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு ஒளிவேகத்தில் பயணித்தால் 1,00,000 ஆண்டுகள்தான் ஆகும்.பிரமிப்பாக இருக்கிறதா?இந்தத்தகவல்களை மதிப்பிட்டுக்கூறியிருப்பது நமது வானியல் விஞ்ஞானிகள்.ஆக,இந்த விஞ்ஞானிகளையும்,உங்களையும்,என்னையும் படைத்த கடவுள் எப்பேர்ப்பட்டவராக இருப்பார்!?!)விட்டு அண்டம் செல்ல உதவும் 'சொரூப மணி' என்னும் பாதரஸ மணியினை வாயிலும், 'கமலி' என்ற மணியினைக் கையிலும் எடுத்துக் கொண்டு ஜோதியே வடிவான அண்டவெளியில் பாய்ந்தாராம்.

பலப் பல அண்டங்களில் பலப் பல சித்தர்கள் வாழ்வதைப் பார்த்து வியந்து அவர்களிடம் ஆசி பெற்றுச் செல்லும் போது ஒரு சம்பவம் நடந்தது.
ஒரு அண்டத்தில் இருந்த சித்தர்களில் ஒருவர் திருமூலரின் கவுனமணிக் குளிகையைப் பார்த்துவிட்டுத் தருவதாகக் கேட்டிருக்கிறார்.

திருமூலரும் அதை நம்பி அவரிடம் கவுனமணிக்குளிகையைத் தந்தார்.அவர் அதைப் பயன்படுத்தி பல அண்டங்களுக்கு ஓடி மறைய முயன்றார்.திருமூலரும் தன்னிடமிருக்கும் மற்றொரு குளிகைமூலமாக மிகவும் சிரமப்பட்டு விரட்டிப் பிடித்து அந்த கவுனமணிக் குளிகையை திரும்பப் பெற்றார்.அவரை அந்த அண்டத்திலேயே விட்டுவிட்டுத் திரும்பிவிட்டார்.

திருமூலர் தான் பயணித்த அண்டங்களைப் பற்றி பல பாடல்களில் விவரிக்கிறார்.
ஒரு அண்டத்தில் பல சித்தர்களைக் கண்டிருக்கிறார்.அவர்களைக் கையால் தொட்டால் கைகளில் தட்டாமல் கை உடலுக்குள் சென்று வந்திருக்கிறது.மற்றொரு அண்டத்தில் உள்ளவர்கள் வெண்சங்கு நிறத்தில் இருக்கிறார்கள்.இன்னொரு அண்டத்தில் தண்ணீருக்குள் வாழ்ந்து வருகிறார்கள்.இவ்வளவு அண்டங்களையும் சுற்றிப்பார்த்த திருமூலர் நமது பூமியில் ஜீவசமாதியானது நாம் செய்த புண்ணியமே!



திருமூலர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம் ஆடுதுறைக்கு அருகில் இருக்கும் சாத்தனூர் என்ற இடத்தில் உள்ள ஐயனார் கோவிலில் அமர்ந்திருந்தார்.அங்கிருக்கும் அரசமரத்தடியில் அமர்ந்து திருமந்திரம் எழுதியுள்ளார்.இந்தக் கோவிலின் பின்புறம் ஜீவசமாதியாகியுள்ளார்.

இவ்விடத்தைப் புதுப்பிக்க சில அன்பர்கள் முயன்றபோது,பூமியின் உள்ளே தண்ணீர் நிரப்பப் பட்ட கமண்டலம் ஒன்றும்,யோக தண்டம் ஒன்றும்,ருத்ராட்ச மாலை ஒன்றும் இருந்ததாகவும் கூறுகிறார்கள்.தற்போது இந்த இடத்தில் சில அன்பர்கள் தியான மண்டபம் கட்ட முயன்றுவருகிறார்கள்.திருமூலர் புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தார்.
இவரது குருநாதர் நந்தீசர்.
இவரது சீடர் போகர்.
நன்ரி:ஜோதிட பூமி பக்கம் 49,50,மார்ச் 2008.
சாய்ந்து சுற்றும் பூமியே நேராய் நம்மை தாங்கிப் பிடித்து வழிநடத்துகையில்...
நேராய் நடக்கும் நம்மால் நாலு பேருக்கு உதவியாய் இருந்து வாழ வழிநடத்த முடியாதா என்ன?

சிந்திப்போம்...
நல்விடியலாகட்டும்!!!
அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார். என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.

அக்பர் யோசிச்சார். பீர்பாலை பார்த்தார். பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.

மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது. அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்.

அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன். கூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன். அச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை.

பயம் ஒரு பெரிய நோய். நிறைய பேர்களுக்கு வியாதி வர காரணம், தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான்.

அச்சமின்மையே ஆரோக்கியம்!

பின்குறிப்பு: 
இந்த கதையை எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்னார். சொன்ன நண்பரை மேலும் கிழும் பார்த்தேன். 
அவர் கல்யாணத்துக்கு முன் எப்படி இருந்தாரோ அப்படியேதான் இப்போதும் இருந்தார்.

சரிதான். சிங்கத்துடன் வாழ்க்கை நடத்துறாரு போல!!!!!

😄😃😊😝😜😛
வளையக் கூடியது தான் இருந்தாலும் வளைந்து கொடுக்காமல் வம்பிழுத்துவிடுகிறது.. *நாக்கு..!*
தோல்வியுற்ற காதல் என்பது இந்த உலகத்திலே இல்லையென்பேன் கர்வத்துடன்.காரணம் அதுவும் கூட வாழ்ந்து கொண்டுதான் இருக்கும் இருவரில் ஒருவரது உள்ளத்தில்.....
.
.
 ஒருதலை ராகமாக!
ஆங்கில மொழியில் America, Japan, Bhutan, Srilanka, Bangladesh, Nepal மற்றும் Pakistan நாடுகளின் பெயர்கள் அவ்வாறே உச்சரிக்கிறோம் ஆனால்  Bharath (பாரதம்) மட்டும் India என்று ஏன் உச்சரிக்கின்றன? 
உங்களுக்கத் தெரியுமா India வின் விரிவாக்கம் என்னவென்று?... ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷனரிப்படி India என்பதன் பொருள்
I-INDEPENDENT 
N-Nation
D-Declared
I-IN
A-AUGUST
(India)
99% இந்தியர்களுக்கும் இது தெரியாது.....
அனைவரையும இத்தகவல் சென்றடய நீங்களும் பகிருங்கள்....😬
என்னைத்  துரத்தும்
 உன் கண்களுக்கும்,
 உன் கண்களைத் துரத்தும் என் காதலுக்கும், இடையில் காணமல் போனது
 என் வெட்கம்..!


காதலுக்காக 
ஒரு ஆண் கண்ணீர்
சிந்தும் போதும்..

அதே காதலுக்காக
ஒரு பெண் கண்ணீரை
மறைக்கும் போதும்..

அந்த காதல் 
அழகாகிறது ...
ஒரு பெண் தனியாக இருக்கிறாள் என்றால்... அது ஆண்களுக்கு வாய்ப்பு அல்ல, 
அது ஆண்களின் பொறுப்பு...
..
""""""""""""""""""""""""""""""""""
நான் அந்த விமானத்தில் ஏறி என் இருக்கையைத்  தேடி அமர்ந்தேன்.. 

விமானம் புறப்படும் சற்று நிமிடம் முன்பு ஒரு பதினைந்து நம் இராணுவ வீரர்கள் வந்து என் இருக்கையை சுற்றி அமர்ந்தார்கள்..  
நான் அவர்களுடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தேன்..

எந்த எல்லைக்கு பணி நிமித்தமாக செல்கிறீர்கள்..?
ஆக்ராவுக்கு ..அங்கு இரண்டு வாரம் பயிற்சி, அதன் பின்பு காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணி ...

ஒரு மணி நேரம் சென்றிருக்கும்..
அப்பொழுது ஒரு அறிவிப்பு.. 

மதிய உணவு தயார்.. சரி உணவு வாங்கலாம் என்று நான் என் பர்ஸை எடுக்க முற்படும்போது...எனக்கு பின்னால் இருந்த ராணுவ வீரர்களின் பேச்சை கேட்க நேரிட்டு மனம் உ டைந்து போ னேன்.. 

ஏன்...சாப்பாடு வாங்கலையா?
இல்லை ..விலை அதிகம்..என்னால் அவ்வளவு காசு செலவழிக்க முடியாது.. மூன்று மணி நேரம் போனால் டெல்லி வந்து விடும்.. அங்கு இறங்கி உண்ணலாம் ..விலை குறைவாக இருக்கும்

ஆமாம்..உண்மை.

இதை கேட்ட பொழுது.... மனது மிகவும் வலித்தது...உடனே
விமானத்தின் பின்புறம் உணவுடன் நின்றிருந்த அந்த விமான பணிப்பெண்ணிடம் சென்று, பதினைந்து உணவுக்கான காசை கொடுத்து, அவர்களுக்கு உணவு கொடுக்க சொன்னேன்.. 

அந்த பணிப்பெண் என் கைகளை பிடித்தாள்.. கண்களில் கண்ணீர்.. இது கார்க்கிலில் இருக்கும் என் சகோதரனுக்கும் சேர்த்து என்றாள்.. 

நான் உண்டு முடித்து, கை கழவ சென்றேன்.. அப்பொழுது ஒரு முதியவர் என்னை நிறுத்தி, நீங்கள் செய்தததை நான் பார்த்தேன்...நான் வெட்கப்படுகிறேன் எனக்கூறி இந்தாருங்கள்..என் பங்கு ரூபாய் 500 என்று என்னிடம் கொடுத்தார்.. 
நான் என் இருக்கைக்கு திரும்பினேன்..

சற்று நேரத்தில் விமான கேப்டன் என்னிடம் வந்து கண்ணில் நீர் தழும்ப என் கைகளை பிடித்து குலுக்கி,  இது  ஒரு மிகப்பெரிய கருணை செயல்..
மிக்க சந்தோஷம்.. உங்களை போன்றவர்களை தாங்கி இந்த விமானம் பயணிப்பது அதிர்ஷ்டமே என்று சொல்லி சென்றார்.

ஒரே கைதட்டல் விமானத்துக்குள் விண்ணுக்கு எட்டும் வரை..

முன்னால் இருந்த ஒரு 18 வயது இளைஞன் என்னிடம் கை குலுக்கி, என் கைக்குள் ரூபாயை திணித்தான்..

விமானம் வந்து நின்றது..நான் இறங்கினேன்.. இறங்கும் பொழுது ஒருவர் என் சட்டை பையில் சில நோட்டுக்கற்றைகளை திணித்தார்...

இறங்கி நடந்தேன்.. அந்த வீரர்கள் ஒரு குழுவாக அவர்களை ஏற்றிச்செல்லும் இராணுவ வண்டிக்காக காத்திருந்தார்கள்..
அவர்கள் அருகில் சென்றேன்.. நான் செலவழித்த பணத்தை விட, இப்பொழுது என்னிடம் அதிக பணம்..
ஒரு தூண்டுதல்..பலரின் வேண்டுதலை நிறைவேற்றியது போல்..
அனைத்து பணத்தையும் அவர்களிடம் கொடுத்தேன்.. போகும் வழியில் நன்றாக சாப்படுங்கள்.. கடவுள் உங்கள் எல்லாருக்கும் துணை இருக்கட்டும்..

காரில் ஏறி அமர்ந்து யோசித்தேன்...

இந்த இளம் வீரர்கள் குடும்ப பாரத்தோடு நம் நாட்டின் எல்லைகளை பாதுகாத்துக்கொண்டு..தன்னடைய  உயிரினை துச்சமாக மதித்து எப்படி நம்மை பாது காக்கிறார்கள்.. இவர்களுக்கு நான் கொடுத்தது ஒன்றுமில்லை...
இவர்களின் தியாகத்தை புரிந்து கொள்ள தயாரில்லாத இவர்களின் வயதை ஒத்த நம் இளைஞர்கள் 
வெறும் பொழுது போக்கு அம்சங்களை தரும் சினிமா நடிகர் நடிகைகளை மிகவும் போற்றி கொண்டாடுவதுடன் அவர்களை தெய்வங்களாகவும் பூஜிப்பதுடன்.அவர்களுக்காக கோயில் கட்டி வணங்குவது போன்ற செயல்களால் தங்களது வாழ்க்கையை சீரழித்துக்கொண்டிருக்கின்றர்கள்..என்பது
மிகுந்த வேதனை...

கோடி கணக்கில் பணம் சொத்து சம்பாதிக்கச் செய்யும் சமூகம்,
 ஓட்டு போட்ட மக்களை  ஏமாற்றும் அரசியல்வாதிகள்...மற்றும் லஞ்சம்  வாங்கும் அதிகாரிக்ள் கூட இந்த இராணுவ வீரர்களை  நினைத்துக்கூட  பார்ப்பதில்லை என்ற வேதனை என்னை மிகவும் தாக்கியது....

எம் தேசத்து என் இளைஞனே..என் சகோதரனே...
நம் தேச நலன் காக்க 
வெளியே வா.....

ஜெய் ஹிந்த் *


சில்லென்ற தென்றல் காற்றே, 
சிலுசிலுக்கும் மேனியில் படாதே, 
என்னழகைக் கண்டு மயங்கும், 
என்னவள் இங்கு வந்து சேரட்டும். 

மெல்லிசை கொலுசு பாடும், 
மெல்லிய பாதம் நோகும்! 
அடி ஒன்று எடுத்து வைத்த பின்னே,
அடியவள் பாதம் வருடி விடுவாயே! 

புல்லில் படிந்த பனிநீரால், 
பாதத்து மண்ணைக் கழுவி விடு! 
பாதையில் மலர்ந்த பூக்களால், 
பாவைக்கு மலர் கம்பளம் விரித்துவிடு! 

மரத்தடியில் படுத்துறங்கும் சருகுகளை, 
மல்லுக்கட்டி இடம் பெயர்த்துவிடு! 
நுண்மணல் தரையில் பரப்பி, 
நூதனமாய் மகரந்தம் தூவிவிடு! 

காதல் ஜோடி அன்பைப் பரிமாறும்வரை, 
கண்ணிமைக்காது காவல் காத்து நிற்பாயே! 
மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்தை, 
மூடிய முகத்துடன் மும்மரமாய் கண்கானிப்பாயே!

கனவுகள் காதலுக்குள் தொலைந்ததடி 
தொலைந்த நினைவுகள் கூட்டி காலம் கடந்ததடி.. 
செல்ல சண்டைகளும், பட்ட காயங்களும் கனிபோல் இனித்ததடி
காலம் கடந்ததும் அதன் வடுக்கள் வலிக்குதடி..
நிலவொலியில் 
உன்முகம் 
கண்டேன் 
முழுமதி எதுவென வியந்தேன் 
நிலவு கூட உன் முகம் 
கண்டு விலகி ஓடும்... 

அழகிலே நிலவை 
தோற்கடித்தாய் 
காதலில் என்னை காணாமல் 
செய்தாய் 
நான் கட்டிய கூட்டில் 
சிட்டு குருவியாய்... 

வாழ்நாளில் உயிரின் ஓசை 
உன்னில் காதலாய் ஓட 
என்னில் மட்டும் நீங்காமல் 
ஜென்ம ஜென்மாய் நீ 
காதல் தொடர்வாய்...
ஒரு முதலாளி Zoo ஒன்றை ஆரம்பித்தார். நுழைவுக் கட்டணம் ரூ.100. யாரும் வரவில்லை. பிறகு ரு.50, ரூ.20 என்றார். யாரும் வரவில்லை. அனுமதி இலவசம் என்றார். கடுமையான கூட்டம். எல்லோரும் உள்ளே வந்த பிறகு, புலிக் கூண்டைத் திறந்து விட்டு, வெளிக் கேட்டைப் பூட்டி விட்டார். வெளியே வர வேண்டுமானால் 303ரூ கட்டணம் என்றார். அந்த முதலாளிதான் Jio முதலாளி..
ஒரு ஊர்ல...
ஒரு வெங்காயம், ஒரு தக்காளி,
ஒரு உருளைக்கிழங்கு, இந்த மூணு பேரும் ரெம்ப திக் ஃப்ரெண்ட்ஸா இருந்தாங்க.
ஒரு நாள் அந்த மூணு பேரும், கடலுக்கு குளிக்க போனாங்க.

அப்போ, சொல்ல சொல்ல கேக்காம அந்த உருளைக்கிழங்கு, கடலுக்குள்ள ரெம்ப தூரம் உருண்டு போனதால மூழ்கி இறந்து போச்சு.

அதை கண்ட தக்காளியும், வெங்காயமும் பீச்சுல புரண்டு புரண்டு அழுதாங்க.

சோகம் தாங்காம இருவரும் வீட்டுக்கு கிளம்பினாங்க.
போற வழியில, வேகமா வந்த ஒரு தண்ணி லாரியில ஆக்ஸிடண்ட் ஆகி தக்காளி நசுங்கி செத்துப் போச்சு.

அதை பார்த்து வெக்ஸ் ஆன வெங்காயம், கதறி கதறி அழுதது.
தனியாகி போன வெங்காயம், அழுதுகிட்டே கடவுள் கிட்ட போயி, "உருளைக்கிழங்கு செத்தப்போ, நானும் தக்காளியும் அழுதோம்.
இப்ப தக்காளி செத்தப்போ, நான் மட்டும் அழுதேன். ஆனா நாளைக்கு நான் செத்தேன்னா, எனக்குன்னு அழ யாரு இருக்கா...?" ன்னு கேட்டு,
"ஓ..." ன்னு அழுதுச்சு.

அந்த வெங்காயம் அழுவதை பார்த்து தாங்கி கொள்ள முடியாத கடவுள், "சரி..., இனிமே நீ சாவும்போது யாரெல்லாம் பக்கத்துல இருக்காங்களோ, அவங்க எல்லாரும் அழுவாங்க" ன்னு சொல்லி அதுக்கு வரம் கொடுத்து அதை சமாதான படுத்தினாராம்.

(ஸோ..., இனிமே யாராச்சும், "வெங்காயம் நறுக்கும்போது, ஏன் கண்ணுல தண்ணி வருது" ன்னு கேட்டா, 'திருதிரு'ன்னு முழிக்காம, சோகமான இந்த திக் ஃப்ரெண்ட்ஸ் கதைய தெரியப்படுத்துங்க) ok va....deal ah...