Designed by Enthan Thamizh

ரிலையன்ஸில் பொருட்களை வாங்கி விட்டு கேஷ் கவுண்டரில் நின்று கொண்டிருந்தேன்.

இரண்டு மூன்று முறை டெபிட் கார்டை தேய்த்து சோர்ந்து போன பணியாளர்,

" சர்வர் ப்ராப்ளம் சார் எந்த கவுண்டர்லயும் கார்ட் ஸ்வைப் பண்ண முடியல கேஷ் வச்சிருக்கவங்க மட்டும் நில்லுங்க "

" ரெண்டாயிரம் நோட்டா இருக்க அதையாவது வாங்கிக்குவீங்களா ? "

" சில்லற இருக்காது சார். 1500 ரூவாக்கு மேல பில் போடுற மாதிரி பர்ச்சேஸ் பண்ணா சேஞ்ச்க்கு ட்ரை பண்றேன். இல்லனா பொருட்கள அங்க வச்சிட்டு போங்க. ஒரு மணி நேரம் கழிச்சு வந்து பாருங்க சர்வர் ப்ராபளம் சால்வ் ஆச்சுன்னா வாங்கிட்டு போங்க "

எனக்கு பின்னால் நின்ற பெரியவர்,
" சார் என்கிட்ட பழைய 500 ரூவா நோட்டு இருக்கு அதையாவது வாங்கிக்குவீங்களா "

" இல்ல சார் அதெல்லாம் வாங்கமாட்டோம்னு என்ட்ரன்ஸ்லேயே போர்டு வச்சிருக்கோமே பாக்கலியா "

மணி இரவு ஒன்பது ஆகியிருந்தது

இன்னும் ஒரு மணி நேரம் கழித்து ரிலையன்ஸ் திறந்திருக்குமா என்பதே சந்தேகம்தான்.

இதில் சர்வரும் சரியாகி இருக்க வேண்டும்.

நாளை காலைத் தேவைக்கான சில அத்தியாவசியப் பொருட்களை இன்றே வாங்கி ஆக வேண்டிய கட்டாயம் வேறு.

வேறு ஏதேனும் கடையில் முயற்சிக்கலாம் என்றாலும், பத்து நாட்களாக கிடைக்காத சில்லறை இப்போது மட்டும் கிடைத்து விடவா போகிறது.

வீட்டுக்கருகில் இருக்கும் அண்ணாச்சி கடைக்கு வழக்கமாக நான் அதிகம் செல்வதில்லை.

இருந்த போதிலும் ஒரு முறை அங்கும் முயற்சிக்கலாமே என்ற முடிவு செய்து அண்ணாச்சி கடைக்குச் சென்றேன்.

இரண்டாயிரம் விசயத்தை முதலில் சொன்னால் அண்ணாச்சி சில்லறை இல்லை என்று சொல்லி விடுவாரோ என்ற தயக்கத்தில் தேவையான பொருட்களை வாங்கிய பின்னர் இரண்டாயிரம் ரூபாய் நோட்டைக் கொடுத்தேன்.

"ரெண்டாயிரத்துக்கெல்லாம் சில்றை இல்ல சார். வேண்ணா பழைய 500 ரூவா நோட்டுக்கூட குடுங்க வாங்கிக்கிறேன். "

" சரி பராவாயில்ல அண்ணாச்சி. எங்கிட்ட வேற பணம் இல்ல.இந்தாங்க இந்த பொருள எடுத்துக்கங்க "

" ஏன் சார் அப்டி சொல்லுதிய ?
நீங்க மொதத்தெருல நாலாவது ப்ளாட்லதான இருக்கிய.வெள்ளம் வந்தப்பெல்லாம் எல்லாருக்கும் அங்க இங்கன்னு ஓடி ஒடி வேல செய்தியளே. இந்தாங்க பிடிங்க எல்லாப் பொருளையும் எடுத்துட்டுப் போங்க.அப்புறமா பணத்த குடுங்க. நீங்க என்ன எம் பணத்த குடுக்காம ஊரவிட்டா ஓடிப்போகப்போறிய. அவசர செலவுக்கு எதும் ரூவா வச்சிருக்கியளா ? நூறு எரநூறு வேணும்னா நா தரவா ? வாங்கிக்கங்க அப்புறமா குடுங்க சார் "

தயக்கத்துடனும் புன்னகையுடனும் அண்ணாச்சியிடம் பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தவுடன் மொபைலுக்கு மெஸ்ஸேஜ் ஒன்று வரவே எடுத்துப்பார்த்தேன்.

Thank you for using Debit Card ending xxxx for Rs.475.04 in CHENNAI at Reliance Fresh .......

வாங்காத பொருளுக்கு என் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்த அம்பானி எங்கே!

வாங்கிய பொருளுக்கே பணம் வாங்காமல் கடன் கொடுத்த நம்மூர் அண்ணாச்சி எங்கே.!

அனைவரும் இனிமேல் பணமில்லாத பரிவர்த்தனைக்கு
(Cash less Transaction) மாறுங்கள் என்று அண்ணாச்சி கடைகளை ஒழித்து,

அம்பானி கடைகளை அதிகரிக்கத் துடிப்பவர்களுக்கு (இங்கு சில வார்த்தைகள் எடிட் செய்யப்பட்டுள்ளது) தெரியுமா.?

அம்பானி கடைகளிலும், ஆன்லைனிலும் வெறும் வணிகமும், இலாப நோக்கமும் மட்டும்தான் இருக்கும்.

ஆனால் அண்ணாச்சி கடைகளில் மட்டும்தான் வணிகம், இலாபம் தாண்டி, வாடிக்கையாளருக்கும், வணிகருக்கும் இடையே ஒரு அன்பு கலந்த உயிரோட்டமான உணர்வுபூர்வமான உறவு இருக்கும் என்பது.
🙏🙏🙏🌺🌺🙏🙏🙏

*சொர்க்கத்தில் ஒருநாள்*

*MGR*
வா அம்மு இப்ப தான் என்னை பார்க்க ஞாபகம் வந்ததா ?

*ஜெ*
*புதிய பூமி* யில் *ஆயிரத்தில் ஒருவனாக* இல்லாமல் நீங்கள்
*குடியிருந்த கோவிலான* "கழகத்தை" *அடிமைப் பெண்ணாக* இல்லாமல் *தனிப்பிறவி* யாக "கழகத்தை" பாதுகாத்தேன்

*MGR*
மகிழ்ச்சி!....... என்ன சொல்லிவந்தாய்?

*ஜெ*
உடல்நிலை சரியில்லைஎன்று!!!

*MGR*
அமெரிக்கா சென்றாயா?

*ஜெ*
அப்பல்லோவுக்கு சென்றேன்!

*MGR*
அதுபோதுமே" சொர்க்கத்துக்குவர

*ஜெ*(சோகமாக)
மக்களின் பாரமும்குறையவில்லை என் மனபாரமும் குறையவில்லை
புறப்பட்டு வந்து விட்டேன்

*MGR*
நம்கட்சி

*ஜெ*
கட்டுக்கோப்பாக இருக்கிறது தலைவா

*MGR*
நன்றி அம்மு நம்இரத்தத்தின்இரத்தங்கள்

*ஜெ*ஏதோ இருக்கிறார்கள் தலைவா....... *நீங்கள் இல்லாத வேதனையில். அன்று*  . ......
*நான் இல்லாத வேதனையில் இன்று*

*MGR*
நண்பர் கருணாநிதி

*ஜெ*
ஏதோ அலர்ஜியாம் காவேரியில் இருக்கிறராம்

*MGR*நல்ல வேளை அப்பல்லோவுக்கு செல்லவில்லை ?

*ஜெ*
முதல்வராகத்தான் இங்கு வருவேன் என்று அடம் பிடிக்கிறார் நான்விடவே இல்லை

(அப்போது சோ. வருவதைப்பார்த்து)
*MGR*
அடடா துக்ளக் நீயும் வந்து விட்டாயா? ஏற்கனவே இங்கே ஒருநாரதர் இருக்கிறாரே

*சோ*(சிரித்தபடி) நாரதர் கலகம் நனமையில் முடியும்
(ஜெ வை பார்த்ததபடி)யாருக்கு வழி காட்டினேனோ அவரே வந்த பிறகு எனக்கு
அங்கென்ன வேலை?

*MGR*
அது சரி அம்மு உனக்கு அன்பு தங்கையல்லவா!

*சோ*
நாடோடி மன்னா இங்கே நீங்க எந்த கட்சி.? நான் ஏதாச்சும் ஆலோசனை தரட்டுமா?

*MGR*
(சோ  முதுகில் தட்டிக்கொடுத்து)
இங்கே கட்சி யும்கிடையாது கொடியும் கிடையாது எதிரியும் கிடையாது .
அதை விடகூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகள் கிடையவே கிடையாது. வாங்க நிம்மதியாய் இருக்கலாம்.

😉சித்ர_குப்தா: எப்படி பிரபு ஒரே நாள்ல அத்தன உயிர எடுப்பீங்க?
👍எமன்: ஹா ஹா ஹா! சித்ர குப்தா, நான் எமன் டா. புயலை விடுவேன், மழையை விடுவேன், புகம்பத்தை விடுவேன். அதிலும் சாகாவிட்டால் பூலோகம் முழுக்க 😭அப்போலோ கிளைகள் வைப்பேன்.


சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது. நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்வது, வெயில், மழை என்று பாராமல் உழைப்பது, தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

யார் ஒருவர் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறாறோ அவர் எதிலும் வெற்றி அடைவார். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

இதையெல்லாம் சாணக்கியர் சொல்லியிருக்கார் ..!!!


.
காமராஜர்- கருணாநிதி
பெரியார்- கருணாநிதி
அண்ணாதுரை- கருணாநிதி
எம்ஜிஆர் - கருணாநிதி
ஜானகி- கருணாநிதி
ஜெயலலிதா-கருணாநிதி
.
இப்போ...
.
.

ஓபிஎஸ்- கருணாநிதி...
.
மிஸ்டர் ஓபிஎஸ்... மண்ட பத்ரம்..
என்ன நான் சொல்றது.. 😂😂

எமதர்மராஜா
ஏழைங்களோட உயிர எடுக்க Buffaloல வருவாரு,
பணக்காரங்களோட உயிர எடுக்க Appolloல வருவாரு.

ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான்.

ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு.

ஆனால், அவனுக்கு இடது கை கிடையாது.

கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம்.

கையில்லாத பையன் என்ன செய்வான் ?

பல மாஸ்டர்களிடம் போனான்.

எல்லோரும் அவனை பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக் கொண்டார்.

பயிற்சி ஆரம்பமானது. குரு ஒரே ஒரு தாக்குதலை மட்டும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார்.

நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடின. குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. பையன் சோர்ந்து போனான்.

"குருவே.. ஜூடோ சேம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா?" என்றான்.

"இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்" என்றார் குரு.

குரு சொல்லிவிட்டால் மறு பேச்சு ஏது ? பையனும் பயிற்சியைத் தொடர்ந்தான். சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது !

முதல் போட்டி. சர்வமும் கற்றுத் தேர்ந்த எதிராளி. ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தப் பையன். போட்டி ஆரம்பமானது. எல்லோரும் ஆச்சரியப் படும் விதமாக பையன் வெற்றி பெற்றான்.

இரண்டாவது போட்டி. அதிலும் அவனுக்கே வெற்றி. அப்படியே முன்னேறி அரை இறுதிப் போட்டி வரை வந்தான். அதிலும் கொஞ்சம் போராடி ஜெயித்து விட்டான்.

கடைசிப் போட்டி. எதிரே இருப்பவன் பலமுறை சேம்பியன் பட்டம் பெற்றவன்.

ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும். பையன் சளைக்கவில்லை. போட்டி ஆரம்பமானது. முதல் சுற்றில் பையனை அடித்து வீழ்த்தினான்.

பையனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. போட்டியை நிறுத்திவிடலாமா என்கின்றனர் போட்டி நடத்துபவர்கள். "வேண்டாம்., பையன் சண்டையிடட்டும்" என்கிறார் குரு.

இந்தப் பையனோடு போரிட இனிமேல் பாதுகாப்புக் கவசம் தேவையில்லை என எதிராளி அலட்சியமாய் வந்திறங்கினான்.
பையன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலை பலமாய் நிகழ்த்தினான். எதிராளி வீழ்ந்தான். பையன் சாம்பியனானான்.

பார்வையாளர்கள் நம்ப முடியாமல் பார்த்தார்கள், போட்டியாளர்களுக்கு ஆச்சரியம். அந்தப் பையனுக்கே தனது வெற்றியை நம்ப முடியவில்லை. அன்று மாலை குருவின் பாதங்களில் பணிந்த அவன் கேட்டான்.

"குருவே. நான் எப்படி இந்த போட்டியில் வெற்றி பெற்றேன் ? ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனே " என்றான்
புன்னகைத்தபடியே குரு சொன்னார் "உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள்.

* ஒன்று ஜூடோவிலுள்ள மிகக் கடுமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய்.

* இரண்டாவது இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும். உனக்குத் தான் இடது கை கிடையாதே !

* உன்னுடைய அந்த பலவீனம் தான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது !" *

குரு சொல்லச் சொல்ல பையன் வியந்தான். தனது பலவீனமே பலமாய் மாறிய அதிசயத்தை நினைத்து நினைத்து ஆனந்தித்தான்.

# நமது மனம் திறமைகளின் கடல். அதில் முத்தெடுப்பதும் நத்தையெடுப்பதும் மூச்சடக்கி நாம் மூழ்குவதைப் பொறுத்தது. #

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை தனித் தனித் திறமைகளைக் கொடுத்திருக்கிறது...

ஒரு அ.தி.மு.க வேட்பாளர் தேர்தல் வேலை செய்யும்   கட்சி ஆட்களுக்கு சரியாக உணவு கூட வாங்கி தருவதில்லை என்று அவரிடம் புகார் சொல்லப்படுகிறது , அந்த வேட்பாளர் போயஸ் கார்டன் அழைக்கப்படுகிறார்.

"என்னப்பா உன் மேல நிறையா புகார் வருதே, கட்சிக்காரர்களுக்கு சாப்பாடு கூட வாங்கி தர முடியாத உன்னால ??"

"அம்மா , நான் தாழ்த்தப்பட்ட ஜாதிய சேர்ந்தவன், என் வீட்ல சாப்பாடு செஞ்சு போட்டா யாரும் சாப்பிட மாட்டேங்கிறாங்க, செஞ்சதெல்லாம் வீணா கொட்ட வேண்டி இருக்கு, எல்லாருக்கும் வாங்கி கொடுக்க எனக்கு வசதியும் இல்ல, என்னை மன்னிச்சுருங்க என்று கதறுகிறார் அந்த வேட்பாளர்..

"அப்படியா விஷயம் , சரி நீ போய் கவலைப்படாம தேர்தல் வேலைகளை கவனி" 

அந்த வேட்பாளர் வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினர் ஆகிறார்.. யாரும் எதிர்பாராத விதமாக அவர் உணவுத்துறை மந்திரியாக அறிவிக்கப்படுகிறார்..

ஊடகங்களை பொறுத்தவரை அது எப்போதும் போல அவரின் விசுவாசிக்கு வழங்கப்பட்ட பதவி , மக்களை பொறுத்தவரை "அந்தாளுக்கு மச்சம்"

ஆனால் அந்த செயலின் உண்மையான அர்த்தம்

"நீ தாழ்ந்த ஜாதினு சொல்லி உன் வீட்டு சாப்பாடை வேணாம்னு சொன்னாங்களா !!! இனி நாட்டுக்கே நீ தான் சோறு போட போற"   என்பது தான்.

அவரின் ஒவ்வொரு அதிரடியான முடிவிற்கு பின்னால் இப்படி ஓரு தாயுள்ளம் கொண்ட சிந்தனை இருந்திருக்கக்கூடும்...!!

#இரும்புபெண்மணி_JJ

அந்த அமைச்சர் வேறு யாருமில்லை இப்போதைய சபா நாயகர் தனபால்தான்

குடியரசு தலைவர்  பிரணாப் முகர்ஜி  மறைந்த  முதல்வரின்  நலன் விரும்பி

அம்மா  அவர்களின்  admirer

மறைவு செய்தி கேட்டு  கலங்கிப் போனவர்  உடனடியாக  சென்னை  வர கிளம்பினார்

பறந்த விமானம் பழுதுபட  டெல்லி  திரும்பினார் 

உடனடியாக   வேறு விமானம்  இல்லை

ஆனாலும்  எப்படியாவது  முதல்வருக்கு    இறுதி   மரியாதை  நேரில் செலுத்தவேண்டும்  என்று
உறுதியாக  இருந்தார்

விமானப்படை சரக்கு  விமானம்  ஓன்று இருப்பதை  தெரிந்து அதில் ஏற விருப்பம் தெரிவிக்க
விமானப்படை  ஒப்புக்கொள்ளவில்லை  பாதுகாப்பு  கருதி

முகர்ஜி பிடிவாதமே  வென்றது

எந்தவித வசதியும்  இல்லாத ஒரு சாதாரண  சரக்கு  விமானத்தில்  எப்படி  பயணிக்கிறார் பாருங்கள்

எவ்வளவு எளிமையான மனிதர்