Designed by Enthan Thamizh

எம்.ஜி.ஆர் ,ஜெ, சோ ஒரு கர்ப்பனை

*சொர்க்கத்தில் ஒருநாள்*

*MGR*
வா அம்மு இப்ப தான் என்னை பார்க்க ஞாபகம் வந்ததா ?

*ஜெ*
*புதிய பூமி* யில் *ஆயிரத்தில் ஒருவனாக* இல்லாமல் நீங்கள்
*குடியிருந்த கோவிலான* "கழகத்தை" *அடிமைப் பெண்ணாக* இல்லாமல் *தனிப்பிறவி* யாக "கழகத்தை" பாதுகாத்தேன்

*MGR*
மகிழ்ச்சி!....... என்ன சொல்லிவந்தாய்?

*ஜெ*
உடல்நிலை சரியில்லைஎன்று!!!

*MGR*
அமெரிக்கா சென்றாயா?

*ஜெ*
அப்பல்லோவுக்கு சென்றேன்!

*MGR*
அதுபோதுமே" சொர்க்கத்துக்குவர

*ஜெ*(சோகமாக)
மக்களின் பாரமும்குறையவில்லை என் மனபாரமும் குறையவில்லை
புறப்பட்டு வந்து விட்டேன்

*MGR*
நம்கட்சி

*ஜெ*
கட்டுக்கோப்பாக இருக்கிறது தலைவா

*MGR*
நன்றி அம்மு நம்இரத்தத்தின்இரத்தங்கள்

*ஜெ*ஏதோ இருக்கிறார்கள் தலைவா....... *நீங்கள் இல்லாத வேதனையில். அன்று*  . ......
*நான் இல்லாத வேதனையில் இன்று*

*MGR*
நண்பர் கருணாநிதி

*ஜெ*
ஏதோ அலர்ஜியாம் காவேரியில் இருக்கிறராம்

*MGR*நல்ல வேளை அப்பல்லோவுக்கு செல்லவில்லை ?

*ஜெ*
முதல்வராகத்தான் இங்கு வருவேன் என்று அடம் பிடிக்கிறார் நான்விடவே இல்லை

(அப்போது சோ. வருவதைப்பார்த்து)
*MGR*
அடடா துக்ளக் நீயும் வந்து விட்டாயா? ஏற்கனவே இங்கே ஒருநாரதர் இருக்கிறாரே

*சோ*(சிரித்தபடி) நாரதர் கலகம் நனமையில் முடியும்
(ஜெ வை பார்த்ததபடி)யாருக்கு வழி காட்டினேனோ அவரே வந்த பிறகு எனக்கு
அங்கென்ன வேலை?

*MGR*
அது சரி அம்மு உனக்கு அன்பு தங்கையல்லவா!

*சோ*
நாடோடி மன்னா இங்கே நீங்க எந்த கட்சி.? நான் ஏதாச்சும் ஆலோசனை தரட்டுமா?

*MGR*
(சோ  முதுகில் தட்டிக்கொடுத்து)
இங்கே கட்சி யும்கிடையாது கொடியும் கிடையாது எதிரியும் கிடையாது .
அதை விடகூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகள் கிடையவே கிடையாது. வாங்க நிம்மதியாய் இருக்கலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக