Designed by Enthan Thamizh

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்;- (Sleepping Methods)


மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும்.
இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்குவகிக்கின்றது.
மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. 
உடலிலுள்ள கோடிக்கணக்கானசெல்களைதினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கிபுத்துணர்வு  [Refresh]பெறவும்,உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது.

இரவில் தூங்கும் போதுதான்உடலின் வளர்ச்சிஅதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.தூங்குவதற்கு ஏற்ற காலம்இரவு மட்டும்தான் என்பது இயற்கையின்விதிகளில்ஒன்று.பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறிஇரவில் குளிர்ச்சிபொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

ஆனால்  இன்றைய நாகரீக உலகில்இணையதள நிறுவனங்க ளில்வேலை பார்க்கும் பலரும்இரவில் கண் விழித்துபகலில் தூங்கு கின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி...,

 சித்தர் பாடல் ஒன்று;-

"சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரைநாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரைநம்பிக் காண்!"

இதன் விளக்கம் :-
இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில்
புத்தி மயக்கம்,தெளிவின்மை, ஐம்புலன்களில்[உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல்,போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரைபற்பல நோய்கள்கவிக் கொள்ளும்.எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதைசித்தர்கள் அன்றேதெளிவாகக் கூறியுள்ளனர்.

"உத்தமம் கிழக்கு!
ஓங்குயிர் தெற்கு!
மத்திமம் மேற்கு!
மரணம் வடக்கு!

கிழக்குதிசையில் தலை வைத்து படுப்பதுமிகவும் நல்லது.தெற்குதிசையில் தலை வைத்துப் படுத்தால்ஆயுள் வளரும்.மேற்குதிசையில் தலை வைத்துப் படுத்தால்கனவு,அதிர்ச்சி உண்டாகும்.வடக்குதிசையில் ஒரு போதும் தலை வைத்துதூங்கக் கூடாது.இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

வடக்கு திசையில் இருந்து வரும்காந்தசக்தி தலையில்மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால்மூளைபாதிக்கப் படுவதுடன்,இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சிஉண்டாகும்.மேலும்மல்லாந்துகால்களையும்,கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது.இதனால் இவர்களுக்குத் தேவையானஆக்ஸிஜன் [பிராண வாயு]உடலுக்குக் கிடைக்காமல்குறட்டை உண்டாகும். 
குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.

#நன்மை;-
இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும்இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாகஒருக்களித்துபடுத்து தூங்கவேண்டும்.இதனால்வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில்ஓடும்.இதில்எட்டு அங்குலம்மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால்நீண்ட ஆயுள்வளரும்.மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்துபித்தநீரைஅதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்துஇதயம் பலப்படும்.

#தீமை;-
வலது பக்கம் ஒருக்களித்துபடுப்பதால்இடது பக்க மூக்கின்வழியாகசந்திரகலை சுவாசம்ஓடும்.இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும்.இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.இரவில் உண்ட உணவு சீரணமாகாமல்புளித்துப் போய் விஷமாகநேரிடும்.

நன்றி!;-இமயகிரி சித்தர்&சித்தர் பிரபஞ்சம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக