Designed by Enthan Thamizh

தட்சிணேஸ்வர் கோயிலில் நகைகள் திருட்டுப் போன போது

கோயில் ஒன்றில் கடவுளின் நகைகள் திருட்டுப் போய்விட்டன.

கோயில் பொறுப்பாளர் கடவுளை நோக்கி "உன் நகைகளையே காப்பாற்றிக் கொள்ள சக்தி இல்லாமப் போச்சே.. நீ ஒன்றுக்கும் உதவாதவன்" என்று கடவுளைப் பார்த்து புலம்பினார்.

அப்போது அங்கே வந்த யோகி ஒருவர் அவரைப் பார்த்து "டீக்கடை வாசலில் நீ பன் தின்று கொண்டிருக்கும் போது அதைப் பிடுங்கிக் கொண்டு யாராவது ஓடினால் துரத்திப் போய் திரும்பப் பிடுங்குவாயா?" என்று கேட்டார்.

கோயில் பொறுப்பாளர், "இல்லை" என்றார்.

"உன் பேனாவைப் பிடுங்கிக் கொண்டு யாராவது ஓடினால்?"

"அப்போதும் மாட்டேன்"

"செண்ட்டு பாட்டில், சிகரெட் பெட்டி இப்படி ஏதாவது என்றால்?"

"என்ன பேசறீங்க? என் கிட்ட இருக்கிற காசில் லட்சக்கணக்கான பன், செண்ட்டு, பேனா வாங்கலாம். இதற்கெல்லாமா நான் துரத்துவேன்?"

"உனக்கு ஒரு வீடும் ஒரு காரும் கொஞ்சம் பணமும் சொந்தம். கடவுளுக்கு இந்த உலகமே சொந்தம். அவரவர் லெவலுக்கு ஏற்றார்போல் அவரவர் விட்டுக் கொடுக்கிறார்கள்"

(தட்சிணேஸ்வர் கோயிலில் நகைகள் திருட்டுப் போன போது ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கருத்தின் அடிப்படையில் கொஞ்சம், மசாலா சேர்த்து ஜவர்லால் எழுதிய குட்டிக் கதை) முகநூலில் இருந்து
...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக