Designed by Enthan Thamizh

கணவன்-மனைவி

கணவன் வீட்டிற்குள் வந்ததைக் கண்டதும்...
மனைவி : "வந்துட்டீங்களா...! உங்களைத்தான் தேடிக்கிட்டே இருந்தேன்"!.
கணவன் : "ஏன்?... என்னாச்சு"..?..
மனைவி : "இன்றைக்கு ஒருத்தன் எங்க அப்பாவைப் பத்தி தப்பா பேசிட்டான்,...நானும் அவங்கப்பனை நல்லா திட்டிட்டேன்"! ...
கணவன் : "சரி"...!
மனைவி : "இருந்தாலும் ஆத்திரம் அடங்க மாட்டேங்குது..!அவன் அப்பனோட மண்டைய உடைச்சாத்தான் நிம்மதி"!.
கணவன் : "(கலவரப் பீதியில்...) நமக்கெதுக்கும்மா இந்த வம்பு?மன்னிச்சு விட்டுட வேண்டியதுதானே"!.
மனைவி : " மன்னிக்கிறதா?..அந்த பேச்சுக்கே இடமில்ல.
எங்க அந்த உருட்டு கட்டை.....(என்று தேடிக் கொண்டே செல்ல...)
(வாசலிலிருந்து வந்த மகன்...) மகன் : " யப்பா...சீக்கிரம் ஓடிடுப்பா"!..
அப்பா : "ஏண்டா"..?
மகன் : "நான்தான் கோபத்துல தாத்தாவ திட்டிட்டேன்பா"!!
அப்பா : "அடப்பாவி மகனே! வீட்டுக்குள்ள வந்தாலே உசுர கையில பிடிச்சிகிட்டு அலைய வேண்டியதா இருக்கே., அய்யய்யோ ... இப்ப நான் என்ன செய்வேன்..! எங்க போவேன்..! செய்யாத குற்றத்துக்கு நாயா, பேயா அலைய வைக்கிறாங்களே..... இத கேட்க நாதியில்லையா"....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக