Designed by Enthan Thamizh

இரட்டை டம்ளர் முறை

நீதிபதி.
உங்கள் கடையில் இரட்டை டம்ளர் முறை உள்ளதா?

கடைக்காரர்.
நிறைய டம்ளர் இருக்குங்கய்யா.

நீதிபதி==அதில்லை தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு என தனியாகவும் ஆதிக்கசக்தி மக்களுக்கும் என தனி தனி டம்ளர்ல கொடுப்பீங்களா?

கடைகாரர்.
இரண்டு பேரும் ஒரே நேரத்தில் வந்தா தனித்தனி டம்ளர்லதான் கொடுப்பேங்க.

நீதிபதி.
அது தீண்டாமை சட்டப்படி குற்றம்னு தெரியாதா?

கடைக்காரர்.
அய்யா ஒரே டம்ளரில் ரண்டு பேருக்கும் கொடுத்தா எப்படிங்கையா குடிப்பாங்க?

நீதிபதி.
வேண்டுமென்றே குழப்புகிறீர்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனி டம்ளர் வச்சிருக்கீறீர்களா?

கடைக்காரர்.
அய்யா நான் சொந்தமா முதல் போட்டு கடை வச்சிருக்கேன். என் கடையில் வியாபாரம் எப்படி பண்ணுவது என்பது என் விருப்பம். நான் வித்தியாசமா ரண்டு டம்ளர்ல கொடுக்கறது அவங்களுக்கு அவமானம்னா வேறகடைக்கு போலாமே, என்னை இப்படித்தான் கொடுக்கனும்னு சொல்ல இவங்க யாரு?

நீதிபதி.
குற்றத்தை ஒப்புக் கொண்டதால் தண்டனை
விதிக்கிறேன்.

கடைக்காரர்.
சரிங்கையா, எனக்கு அவசரமா பாத்ரூம் போகனும் உங்க பாத் ரூம்க்கு போகட்டுங்களா?

நீதிபதி.
அங்கெல்லாம் போகக்கூடாது.பப்ளிக்குன்னு தனியா இருக்கு அங்கதான் போகனும்.

கடைக்காரர்.
இங்க மட்டும் எதுக்கு ரண்டு பாத் ரூம்? அப்ப நாங்க தீண்டத் தகாதவங்களா?
போலீஸ்காரய்யா நீதிபதிமேல கேஸ் போடுங்க.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக