Banner - பதாகை.
இன்றைய தனித்தமிழ்ச் சொல்
CCTV (closed circuit television 📺)- சுற்று மூட்டத் தொலைக்காட்சி.
தெரிந்து கொள்வோம்
தமிழ் தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன. அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்.
நாலடியார் 29-10-2015
உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண் அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம் தாம்செய்வ தல்லால் தவத்தினால் தீங்கூக்கல் வான்தோய் குடிப்பிறந்தார்க் கில். தாம் செய்த உதவியைச் சிறிதும் எண்ணிப் பாராது, தமக்கு மிகுதியான தீமைகளைச் செய்தாலும், தாம் அவருக்குத் திரும்பவும்
பட்டினத்தார் சுவாமிகள் கோயில் திருவகலில் கூறும் பழமொழியை பாருங்கள். பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும். தோன்றின மறையும் மறைந்தன தோன்றும். பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பேருக்கும். உணர்ந்தன
இன்றையத் தனித்தமிழ்ச் சொல்
Packing - வரிந்து கட்டல்
லாட்விய மொழியில் திருக்குறள்
அசத்தும் ஐரோப்பிய மருமகள் காதில் கம்மல், கழுத்தில் 'ஓம்' டாலர் சகிதம் சுடிதார் காஸ்ட்யூமில், ''ஐ லவ் டேமில்நாடு'' என்றபடியே வரவேற்கிறார் ஆஸ்ட்ரா! லாட்வியா நாட்டிலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்திருக்கும்
கண்ணதாசனும் அண்ணாவும் ஒரு மகிழுந்துவில் போய்க்கொண்டிருந்த நேரம் தொடர்வண்டிக்காக சாலை மூடப்பட்டிருந்தது. அருகில் இருந்த தேநீர் கடையில் சிறு நொறுக்கும் தேநீரும் அருந்திய பின் கண்ணதாசன் தன் வழக்கப்படியே
தமிழில் எண்களின் விளையாட்டு
செம்மொழியின் சிறப்பு தமிழுடன் போட்டியிட வேறு மொழிகள் ஏதேனும் உண்டா? 1 ஒன்று One 10 பத்து Ten 100 நூறு Hundred 1000 ஆயிரம் Thousand 10000 பத்தாயிரம் Ten Thousand 100000 நூறாயிரம் Hundred Thousand 1000000 பத்து நூறாயிரம் One Million 10000000 கோடி Ten
பள்ளியில் ஒரு மாணவன் என்ன கேள்வி கேட்டாலும் "தெரியாது"என்றே பதில் சொல்பவன்.
தமிழய்யா வகுப்பு நடத்திக்கொண்டிருக்கும் போது திடீரென, ஆய்வாளர் வந்ததுமில்லாமல் அந்த குறிப்பிட்ட மாணவனிடம் ஏதேனும் பொது அறிவுக் கேள்வி கேட்கப் பணித்தார். ஆசிரியருக்கு சங்கடமாய் போயிற்று. பெயரைக் காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தம்.......
.
..
....
கேள்வி கேட்க ஆரம்பித்தார்.
ஆ: பகலில் நட்சத்திரம் தெரியுமா?
மா: தெரியாது
...
ஆ: ஆந்தைக்கு பகலில் கண் தெரியுமா?
மா:தெரியாது
.
ஆய்வாளர்: தமிழ் இலக்கணக் கேள்வி கேளுங்ஙள்!
ஆ:
ம்....தெரியும் என்பதன் எதிர்ப்பதம் என்ன?
மா: தெரியாது.
..
ஆய்வாளருக்கு மிகுந்த திருப்தி. ஆசிரியருக்கு தலைதப்பிய நிம்மதி.'
தமிழின் எளிமையிலும் சிறப்பு
எளிமைச் சிறப்பு! தமிழ்மொழியானது எழுதவும், படிக்கவும், பேசவும் மிகவும் எளிதானது. இதனாலேயே தமிழ் இனிய தமிழ் என்பதோடு, எளிய தமிழ் எனவும் கூறப்பெறுகிறது. இச் சிறப்பைப் பிற மொழிகளிற் காண இயலாது. தமிழ் மொழியானது எழுத மட்டுமல்ல, படிக்கவும் எளிது. தமிழ்
தமிழ் என்பதற்கு இனிமை!
இனிமைச் சிறப்பு "தமிழ்' என்பதற்கு "இனிமை' என்றும் ஒரு பொருளுண்டு. இதனை ""இனிமையும் அழகும் தமிழ் எனல் ஆகும்'' என்பதனால் நன்கறியலாம். மேலே காட்டிய தீந்தமிழ், தேந்தமிழ் போன்ற அடைமொழிச் சொற்களும் இதனை
தமிழின் பெயர்ச் சிறப்பு
நமது தாய்மொழியின் பெயர் "தமிழ்' என்பது. தமிழை ""உயர்தனிச் செம்மொழி'' என்பர் அறிஞர். தமிழ் உயர்ந்த மொழி, தனித்த மொழி, செம்மையான மொழி என்பது இதன் பொருள். "தமிழ்' என்பதற்கு "அழகு' எனவும் பொருள் உண்டு.
சங்க காலம் – ஐவகை நிலங்கள்
சங்க காலத்தில் தமிழக நிலப்பகுதிகள் ஐய்வகைபட்டன. அவை குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் ஆகும். குறிஞ்சி - மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என அழைக்கப்பட்டது முல்லை - காடும், காடு சார்ந்த
நாலடியார் 28-10-2015
நாலடியார் காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல் ஓவாதே தன்னைச் சுடுதலால் - ஓவாதே ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும் காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து. பொருள்:- ஒருவன் நா காவாமல் வாய் திறந்து சொல்லும் சினச்சொல், இடைவிடாது தன்னையே வருத்தும்
தனித்தமிழ்ச் சொற்கள்
Letter pad - தன் முகவரியுடை கடிதத்தாள் கற்றை.
தனித்தமிழ் சொல்
Air cooler -காற்றுக் குளிர்விப்பி.
வணக்கம் என்று ஒருவருக்கொருவர் வாழ்த்திக்கொள்ளும் போது, காலை,மதிய,மாலை மற்றும் இரவு வணக்கம் என்ற கால நேரம் பார்த்து அந்தந்த வேளைகளை அடைமொழி போல் சேர்த்துக் கொள்வது தமிழர் மரபல்ல. வணக்கம் மட்டுமே வாழ்த்தவும் வணங்கவும். வேளையைக் குறிப்பிடுவது ஆங்கில முறையைத்
இன்றையச் சொல்
Fax- தொலை நகல்..
இன்றைய சொல் புதிது..
. Service Road.....அணுகு சாலை
தனித்தமிழ் சொற்கள் மேலும்
திசைகளும் காற்றும்: கிழக்கு- கொண்டல் காற்று மேற்கு: மாருதம்* தெற்கு :தென்றல் வடக்கு: வாடைக்காற்று. *மாருதம் , இதில் இருந்து மாருதி வருகிறது அப்படியானால் வட மொழி என தோன்றலாம், ஆனால் தமிழிலிருந்தும் பல சொற்கள் வடமொழிக்கு சென்றுள்ளது, உதாரணமாக கூலி
தனித்தமிழ் சொற்கள்
நமது பல பதிவுகளிலும் தொழில்நுட்ப சொற்களை சிரத்தையுடன் தமிழாக்கம் செய்து பயன் படுத்தி வந்தாலும் ,பலரும் அதனை கருத்தில் கொள்ளாமல் மேலோட்டமாக படித்து செல்கிறார்கள் ,அப்படி சென்றாலும் பரவாயில்லை ஒரே மட்டையடியாக பொதுவாக தமிழில் அறிவியல் சொற்கள் இல்லை, மேலும்
திருநீறு நமக்கு கவசம்
திருமந்திரம் திருநீறு நமக்கு கவசம் கங்காளன் பூசுங் கவசத் திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில் தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி சிங்கார மான திருவடி சேர்வரே. – (திருமந்திரம் – 1666) விளக்கம்: எலும்புகளினால் ஆன மாலை அணிந்திருக்கும் சிவபெருமான்
அரவம் ஆடடேல்.... விளக்கம் !!
ஔவையாரின் ஆத்திசூடியில் "அரவம் ஆட்டேல்" என்று இருக்கிறது. இதற்கு பொருள் என்ன? சிலர் அரவம் என்பதை பாம்பாக அர்த்தப்படுத்திக் கொண்டு பாம்புடன் விளையாடாதே என்று பயப்படுத்தும்படியாக பொருள் சொல்கிறார்கள். ஆனால் அரவம் என்பதற்கு வேறு பல அர்த்தங்களும் உள்ளன.
மன்னிப்பு என்பது உருது சொல்
ஆர்.வி.பதி எழுதிய, 'உலகம் போற்றும் தமிழறிஞர்கள்' நூலிலிருந்து: தமிழறிஞர் ஒருவர், தெருவில் சென்று கொண்டிருந்தார். சைக்கிளில் வந்த ஒருவன், கவனிக்காமல் அவர் மீது மோதி விட்டான். அதனால், 'ஐயா.. மன்னித்துக் கொள்ளுங்கள்; தெரியாமல் மோதி விட்டேன்...' என்றான்.
ஙப் போல் வளை என்றால் என்ன
"ஙப் போல் வளை" என்றால் ஙே என்று முழிப்பது ஏன்? தொப்புல் கொடியில் இருந்து விடுபட்ட குழந்தை, இவ்வுலகுடன் ஏற்படுத்தும் முதல் ஒலி தொடர்பு "ங்கா..". தமிழின் சிறப்பெழுத்து "ழ" வைப்போல இன்னொரு எழுத்து "ங" இந்த எழுத்தை கூர்ந்து கவனித்தால், ஒருவர் வளைந்து வணக்கம்
* வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏனென்றால், சாதாரணமாக மனிதன் மண் மீது ஒரு வீடுகட்டி குடி போகிறார். ஆனால், ஏற்கனவே அவன் வீடு கட்டுவதற்கு முன்பு அந்த மண் மீது
படைப்பதினால் என் பேர் இறைவன்... நான் நிரந்தரமானவன்.. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை! ♦கவிஞனின் வாக்கு கடவுளின் வாக்கு!!
கடவுளைத் தேடிப்பார்த்தேன்
"கடவுள் என்றதும் ஒரு பொறித்தட்டியது. ஏன் கடவுள் தொடர்பான மென்பொருள்கள், எழுதக்கூடாது. கூகுள் பிளேயில் தேடிப்பார்த்தால், ஏகப்பட்ட மதம் சார்ந்தவைகள்தாம் இருந்தன. தினம் ஒரு பைபிள் வாசகம் சொல்லுவதற்கு, மெக்கா திசை கண்டுபிடிப்பதற்கு,
நாலு கோடிப் பாடல்கள
ஔவையார் ஒரு சமயம் சில புலவர்களைக் காணச் சென்றபோது அப்புலவர்கள் கவலைதோய்ந்த முகத்தோடு காணப்படவே அதன் காரணத்தை வினவினார். "நாளைப் பொழுது விடிவதற்குள் நான்கு கோடிப் பாடல்கள்" இயற்றவேண்டும் என மன்னவன் ஆணையிட்டுள்ளான். அதனால் தான் கவலையடைந்துள்ளோம்" என்று
சங்க காலம் பரந்துபட்ட காலம். அக்காலத்தில் ஒரு சமயத்தில் மூவேந்தருள் சேரன் சிறப்புற்றிருந்தான், மற்றொரு சமயத்தில் சோழன் மேம்பட்டு விளங்கினான், வேறொரு சமயத்தில் பாண்டியன் பெருமை பெற்று விளங்கினான். ஒவ்வொருவனும் மற்ற இருவரையும் அடக்கி ஆள நினைத்த காலங்களும்
நாலடியார் - கடவுள் வாழ்த்து
வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால் கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம் சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து முன்னி யவைமுடிக என்று. வானிலே தோன்றும் வானவில்லின் தோற்றமும் மறைவும் அறிதற்கா¢து; அதுபோலவே, பிறப்பு இறப்பு கியவற்றின் இயல்புகளை அறிதலும்