Designed by Enthan Thamizh

சூதானமா இருப்போம்.

தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று தவறுதலாக முன்னாள் டிஜிபி நடராஜின் புகைப்படத்தை வெளியிட்டதால் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கருத்து தெரிவித்த வேறு நபருக்குப் பதிலாக தனது புகைப்படம் தவறுதலாக இடம் பெற்றதாகவும், தான் அதிமுகவுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படவில்லை என்றும் முன்னாள் டிஜிபி ஆர்.நடராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

ஹலோ 12 வது வட்டச்செயலாளர் பால்பாண்டி அண்ணனா.?

ஆமா நீங்க யாரு.?

அண்ணே நான் 23 வது வட்டச்செயலாளர் பால்பாண்டி பேசறேன்..

அட நீயா.! நானே உன்கிட்ட பேசலாம்ன்னு இருந்தேன்..சொல்லு..

அண்ணே சுதானமா இருங்க ஏதும் வம்பு தும்பா நடக்காதிங்க முக்கியமா பேட்டி கீட்டி தந்துடாதிங்க.. அப்புறம் நீங்கன்னு நினைச்சு கட்சியில என்னை தூக்கிட போறாங்க..

யோவ் இதை சொல்லத்தான் நான் உன்னை கூப்பிட இருந்தேன்... சரி சரி சூதானமா இருப்போம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக