Designed by Enthan Thamizh

சனி, நவம்பர் 28, 2015

Coat-குப்பாயம்

"குப்பாயம்' கொண்டு வா!

தமிழறிஞர் தேவநேயப் பாவாணரை, ஒருமுறை மதுரை தியாகராசர் கல்லூரி விடுதி நாள் விழாவுக்கு அழைத்திருந்தனர்.

தமிழறிஞர் தேவநேயப் பாவாணரை, ஒருமுறை மதுரை தியாகராசர் கல்லூரி விடுதி நாள் விழாவுக்கு அழைத்திருந்தனர். மாணவர்கள் சிலர் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினர். அவரும் ஒப்புக்கொண்டு மாணவர்களுடன் புறப்பட்டார்.

விடுதியின் வாசலுக்கு வந்த பின்னர், ""ஓ! மறந்து விட்டேனே. அறையில் என் "குப்பாயம்' இருக்கிறது. எடுத்து வாருங்கள்'' என்றார்.

"குப்பாயம்' என்றால் என்ன என்று மாணவர்களில் யாருக்கும் விளங்கவில்லை.

""அதுதானய்யா, மேலே போட்டுக்கொள்ளும் கோட்டு'' - என்று அவர் சொன்ன பிறகே விளங்கியதாம்.

மேலுடுப்பு என்றும் கூறலாம்.

ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் இருந்த நமது தமிழறிஞர்கள் கோட்டிற்கு குப்பாயம் என்று பெயர் சூட்டிருக்கலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக